வாசகர்கள் கருத்துகள் ( 12 )
லஞ்சம் ஊழல் ஒழிய ஒரே தீர்வு மரண தண்டனை மட்டுமே
முன்பு நடைமுறையில் இருந்த மணியக்காரர் கணக்குப்பிள்ளை நடைமுறையை ஒழித்து வி ஏ ஓ நடைமுறையை கொண்டு வந்தது மாபெரும் தவறு.
பொது மக்களை பாடாய் படுத்தும் படுத்தும் லஞ்சத்தின் அஸ்திவாரமாக விளங்கும் பட்டா என்னும் காகிதத்தை ஏன் ஒழிக்கக் கூடாது? மாற்று வழியை ஏன் காணக் கூடாது?
இதெல்லாம் ரொம்ப சாதாரணம், நான் வீடு கட்டும் மனை வாங்கி 1997 ஆண்டு வீடு கட்டி வரி கட்டி அதன் மின்சார இணைப்பு பெற்று அநுபவித்து வருகிறேன்.பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தால் மறுக்கப்படுவது,
மாநில அரசுகள் ஊழலுடன் ஒன்றிணைந்துவிட்டன என்ற காரணத்திற்காகவே மூன்றாவது அமைப்பாக லோக் ஆயுக்தா என்ற அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கின்றது . அதன் பணிதன்னிச்சையாக நாட்டில் நடக்கும் லஞ்சம் லாவண்யங்கள் ,ஊழல்களை ,அரசு சொத்துக்களை களவாடல்கள் அறிந்து ஒழிப்பதே .இந்த அமைப்பு யாருடைய அனுமதியும் பெறவேண்டியது இல்லை .ஆனால் மக்களிடையே அரியப்படவில்லை .கர்நாடக மாநிலத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது .ஏனோ தமிழ்நாட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றது.இந்த அமைப்பின்பெயரை தமிழில் மொழிபெயர்த்து ,தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் ,ஈமெயில் தொடர்புகளை மக்கள் அறியும்படி தின்தோறும் செய்தித்தாள்களில் பதிவிட்டு அதன் நோக்கம் நிறைவேற ஊடங்கள் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் . இதுபோன்ற அவலங்கள் கேட்டதற்கு மிகவும் அருவருப்பாக இருக்கின்றது .சக மனிதகுலத்துக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் காட்டுமிருகங்கள் வேட்டையாடுவதுபோல் மக்கள் உழைப்பை வேட்டையாடுவதை இனிமேலும் பொறுத்துக்கொள்ளக்கூடாது .இத்தனைநேரத்தில் அந்த கயவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் இல்லங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்கவேண்டும் .அது ஏன் இன்னும் நடக்கவில்லை ?
நமது நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்காமல், நமது பிரதமர் இந்தியாவை வளர்ந்த, முன்னேறிய, வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஆக்க முடியாது.. கீழ் மட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில அரசு அலுவுலகங்களில் லஞ்சமும் ஊழலும் கரையான் போல, புற்றுநோயை போல செல்லரித்து இருக்கிறது.. அரசு அலுவுலகங்களில் சம்பளத்துக்கு நேர்மையாக மக்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவே.. மீதி 99 சதவிகிதம் கிம்பளத்திற்க்கே வேலை செய்கின்றனர்.. ஆள்பவர்களும் கவுன்சிலர்களில் ஆரம்பித்து எல்லா கான்ட்ராக்ட்டுகளிலும் கமிஷன், கட்டிங் என்று இருக்கும் நிலைமையில் லஞ்சத்திலும், ஊழலிலும் வேண்டுமானால் நாட்டை முன்னேறிய நாடாக மாற்ற முடியும்.... ஊழலும் லஞ்சமும் பயங்கரவாதத்திற்கு சமமான குற்றமாகும்.. நமது நாட்டை அது அழித்து பாகிஸ்தான் பங்களாதேஷ் வரிசையில் கலவர நாடாக மாற்றிவிடும்.. ஊழலையும், லஞ்சத்தையும் இப்பொழுது இருக்கும் சட்டங்களாலும், நீதிமன்ற விசாரணை முறைகளாலும் நிச்சயம் ஒழிக்கவே முடியாது.. 75 ஆண்டுகளாக அரித்து போய்விட்டது.. மிதமிஞ்சிய ஜனநாயகம் மற்றும் அளவிற்கு மீறிய சுதந்திரம் இதற்க்கு காரணம்.... சீனா, சிங்கப்பூர் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயகமும், சிங்கப்பூர், சவுதி போன்ற கடுமையான தண்டனை சட்டங்களும் இயற்றி, அப்பீல் போக முடியாதபடி தண்டனையை நிறைவேற்றவேண்டும்.... மிதமிஞ்சிய ஜனநாயகம் நமது நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டு இருக்கிறது..
நீங்க பாட்டுக்கு லஞ்சம் கேட்டால் இந்த தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கவும் என்று சொல்கிறீர்கள் உங்களிடம் புகார் தெரிவித்தால் நீங்கள் யார் மீது புகார் தெரிவிக்கிறோம் அவர்களிடம் காட்டிக் கொடுத்து இவன் தான் உன்னை காட்டிக் கொடுத்தான் என்று எப்படி ஐயா நம்புவது
இது நம் முதல்வருக்குத் தெரியாதா? ஏன் கடும் நடவடிக்கை இல்லை? டி வி ஏ சி எல்லாம் வெறும் கண்துடைப்பு.
இனி அந்தந்த துறை அலுவகங்களில் லஞ்ச விண்டோக்கள் திறக்கலாம்.
ஒரு உருப்படியான செயல்.
அரசுத் துறைகளைப் பொறுத்தவரை, பணமின்றி எதுவும் இல்லை என்ற நிலை மக்களுக்கு வந்து விட்டது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள அனைவருமே துணிந்து லஞ்சத்தை கேட்டுப் பெற ஆரம்பித்து விட்டதால், கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்ற மோசமான நிலைக்கு நாடு வந்து விட்டது! வெட்கக்கேடு!!