வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திமுக கூட்டணித் தலைவர்கள் சொல்லிக் கொள்வதைப் போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் (எதிர்கட்சிகள்) யாரும் இல்லை. இது நூற்றுக்கு நூறு உண்மை. சொல்லிக்கொள்ளும் படியான வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை. அதற்கு சாட்சி திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வென்றது. திமுகவுக்கு எதிர் அணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால் எப்படியாவது திமுக கூட்டணி உடைந்து விடாதா என்பதைத் தான். அதற்கான வாய்ப்பு என்பது தற்போதைக்கு மிக மிக குறைவு. இதே கூட்டணி தான் அப்படியே அடுத்த சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கும். அதற்கான காரணங்கள் பல உண்டு. ஒன்று காங்கிரஸ் எந்த வலுவான காரணங்கள் இன்றி திமுக கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆட்சியில் பங்கு என்னும் விஜயின் கருத்தை செல்வப் பெருந்தகை வரவேற்பதாக சொல்கிறாரே தவிர டெல்லி தலைமையின் முடிவை ஏற்காமல் விஜயுடன் கூட்டணி வைக்க போவதாக அறிவிக்கிறார் என்று இதற்கு அர்த்தமில்லை. 1996 மத்திய தலைமையின் முடிவை எதிர்த்து மூப்பனார் வெளியேறியதைப் போன்று திறன் மிக்க தலைவர்கள் தற்போது மாநிலத் தலைமையில் எவரும் இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் ஸ்டாலினை சந்திக்கச் செல்லும் முன் ஸ்வீட் பாக்ஸ் வாங்கிக் கொண்டு சென்ற ஒரு சிறு நிகழ்வு மொத்த மீடியாவையும் புரட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். அதனால் எழுந்த நேர்மறையான விமர்சனங்கள் காங்கிரஸ் திமுக இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியது. பிஜேபி மோடியை வைத்து தமிழகத்தில் எத்தனை ரோடு ஷோ நடத்திக் காட்டியும் ஒன்றும் எடுபடாமல் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்று திமுக கூட்டணி அள்ளியது தமிழகத்தில் திமுக எந்த அளவிற்கு வலுவாக உள்ளது என்பதை இந்த நாடே வியந்து பார்த்தது... ராகுல் பிஜேபியை பார்த்து நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட தமிழகத்தை ஆள முடியாது என நாடாளுமன்றத்தில் முழங்கியது பிஜேபியை மிகவும் நெருக்கடிக்கு ஆளாக்கி அவர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கிறது என்றே கூற வேண்டும். அடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வெளியே வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்கள் வெளியேறினால் திமுக கூட்டணியில் பாமக உள்ளே வர வாய்ப்புள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறி செல்லாக்காசாக யார் விரும்புவார். மதிமுக மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மற்றும் பிற உதிரிக் கட்சிகளும் தாங்கள் இருக்கும் இடமே சுகம் என்பது போல இருக்குமேயன்றி ஒருபோதும் இந்த கூட்டணியை விட்டு வெளியே வராது. ஆனால் 2026 தேர்தலில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது. அது என்னவென்றால் விஜயின் தவெக கட்சி ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் மிகப்பெரிய ஒட்டு வங்கியை பெறப்போகிறது என்பது உண்மை... எப்படியெனில் சென்ற தேர்தல் வரை தமிழகத்தில் ஏதாவது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விடாதா என்ற ஏக்கத்தில் இருக்கும் எந்த கட்சியையும் சார்ந்திராத மக்களின் ஓட்டுக்கள், திமுகவில் இருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், பிஜேபியை சார்ந்த ஆட்டுக்குட்டியின் புகழ் பாடி களைத்துப் போன நடிகர் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், தொம்பிகளை மட்டும் நம்பி ஒவ்வொரு முறையும் களமிறங்கும் சீமான் கட்சியைச் சார்ந்த விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள், நங்கூரமின்றி கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் அதிமுகவிலிருக்கும் விஜய் ரசிகர்களின் ஓட்டுக்கள் என பலதரப்பட்ட ஓட்டுக்கள் வந்து குமியப் போகிறது. ஏனென்றால் ரசிகர்களைப் பொறுத்தவரை இவ்வளவு நாட்கள் இருந்த கட்சி பெரிதா இல்லை தனக்கு பிடித்த சினிமா நட்சத்திரம் புதிதாக ஆரம்பிக்கும் கட்சி பெரிதா என்றால் சினிமா நட்சத்திரத்திற்கு தான் முதலிடம்.... ஏற்கனவே குறிப்பிட்டது போல... மேலே குறிப்பிட்டோரின் ஓட்டுக்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் தவெக கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் பெரும் எழுச்சி பெற்று நடிகர் விஜய் முன்னேறிச் செல்ல இது வழிவகுக்கும். 2011 ல் எப்படி தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றதோ அதே போல விஜய் கட்சி கூடிய விரைவில் உருவெடுக்கும்... விஜய் கட்சியினால் பெருத்த அடி வாங்கப் போவது மூன்று கட்சிகள்... 1. அதிமுக, 2. பிஜேபி 3. நாதக. அதிமுகவில் பிரிந்து கிடக்கும் யாவரும் ஒன்றிணைந்தால் கூட இனி அதிமுகவிற்கு எதிர்காலம் கிடையாது. உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்பது போல தமிழிசை தாம் வகித்த கெளரவம் மிக்க பதவியையும் மத்திய பிஜேபி கொடுத்த அழுத்தத்தினால் உதறி விட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்று நொந்து கிடக்கிறார்... வேற்று மாநிலத்தின் MLA க்களின் உதவியால் மட்டுமே ராஜ்யசபா MP பதவியின் மூலமாக மத்திய அமைச்சர் பதவி பெற்றிருக்கும் L போர்டு முருகன் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... இரண்டாம் முறையாக தமிழகத்தில் போட்டியிட்டு தொடர் தோல்வி... நண்பர்கள் கொடுக்கும் பணத்தில் வீட்டு வாடகை உட்பட தன் செலவுகளை கவனித்துக் கொள்ளும் ஆட்டுக்குட்டி மீடியாக்கள் முன்பு வாய்ச் சவுடால் பேசுவது ஒன்றே தன் மூலதனமாக வைத்துள்ளது. தமிழக பிஜேபியில் பொன் ராதாகிருஷ்ணனை தவிர ஒரு நல்ல தலைவரை அடையாளம் காண்பது அரிது. அவரையே இந்த தமிழக மக்கள் தோற்கடிக்கிறார்கள்... ஆகவே மாற வேண்டியது கூட்டணி அல்ல... மக்கள் மனநிலை ஒன்றே... உட்கட்சி பூசலில் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 2026 தேர்தல் தனித்து நிற்கும் கடைசித் தேர்தலாக அமையலாம். நடிகர் விஜய் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க விரும்பாத கட்சிகள் மூன்று... திமுக, அதிமுக மற்றும் பிஜேபி... இவைகள் தவிர்த்து ஆட்சி அமைக்கும் வண்ணம் சாதகமான சூழ்நிலை உருவாக தவெகவுக்கு சில காலம் ஆகலாம். அதுவரை அந்த கட்சியின் செயல்பாடுகளை மற்ற கட்சிகள் உற்று நோக்குமே தவிர அதிரடி முடிவெடுக்கும் நிலை தற்போதைக்கு யாருக்கும் இல்லை. 1996 தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னர் அதிமுக உடனான கட்சித் தலைமையின் கூட்டணி முடிவை மறுத்து கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்து மிக மிகக் குறுகிய காலத்தில் அதற்கு கிடைத்த சைக்கிள் சின்னத்தை மக்களின் மனதில் இடம்பெறச் செய்து அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்திடச் செய்த மூப்பனார் நிகழ்த்தியது போன்ற ஒரு மாயஜாலம் மீண்டும் நிகழ்ந்தால் ஒழிய வலுவான எதிர்க்கட்சி உருவாவது சந்தேகமே... அதுவரை அனைத்து கட்சிகளும் உதிரிக் கட்சிகளே... அதுவரை எந்த மாற்றமும் இருக்காது இந்த தமிழகத்தில்...