உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நெருக்கடி ஏற்படுத்திய தம்பிதுரை; பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி

நெருக்கடி ஏற்படுத்திய தம்பிதுரை; பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி

சென்னை: காற்று மாசு தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படும் வகையில், ராஜ்யசபாவில் அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியது, பா.ஜ., - எம்.பி.,க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. பா.ஜ., கூட்டணி கட்சி எம்.பி.,யான தம்பிதுரை, நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் பேசும்போது, 'தலைநகர் டில்லி யில், கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. 'குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. வீட்டுக்குள் இருந்தாலும், காற்று மாசிலிருந்து தப்பிக்க முடியவில்லை. கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்துகின்றனர். 'ஆனாலும், எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, காற்று மாசுபாட்டை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். டில்லி காற்று மாசு குறித்து, எதிர்க்கட்சியினர், பா.ஜ., அரசை விமர்சித்து பேசினர். அதற்கு துணை போவதுபோல கூட்டணி கட்சியான அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசியதால், ஆளும் பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிருப்தி அடைந்தனர். கடந்த 2014 முதல் 2019 வரை, லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, லோக்சபாவில் பேசும் போது, மத்திய பா.ஜ., அரசை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். 2019 தேர்தலுக்கு முன், அவரது பார்லிமென்ட் பேச்சுகள், பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. அதே வழிமுறையை இப்போதும் தம்பிதுரை பின்பற்றுவது பா.ஜ., மேலிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: டில்லியில் காற்று மாசு ஏற்படுவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. மக்கள் தொகை நெருக்கம், தொழிற்சாலை பெருக்கம் என பல காரணங்கள் இருந்தாலும், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது தான் முக்கிய காரணமாக உள்ளது. டில்லியில் பா.ஜ., அரசு இருப்பதால், காற்று மாசுபாட்டை பெரும் பிரச்னையாக, 'இண்டி' கூட்டணியினர் சித்தரிக்கின்றனர். அதற்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுவது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

ஜெய்ஹிந்த்புரம்
டிச 04, 2025 13:21

ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோது அவர்கள் மாசு கட்டுப்பாட்டுக்காக கார்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் ஓட்டவேண்டி ஒரு திட்டம் கொண்டு வந்தனர். ஒற்றை இலக்கத்தில் உள்ள வாகனங்கள் ஒரு நாளைக்கு, இரட்டை இலக்கத்தில் உள்ள வாகனங்கள் அடுத்த நாள் ஓட்டலாம் என்று. 50% வாகன மாசு குறைய ஒரு எளிய முறை. மாசை குறைக்க மக்களும் உதவ வேண்டியது அவசியம் என்றார். ஆனால் அப்போது கிண்டலடித்த அதே தற்குறிகள் தான் தம்பிதுரையையும் கழுவி ஊத்துகிறார்கள். நாட்டுக்கு வந்த சாபக்கேடுகள்.


Raman
டிச 05, 2025 07:20

Yet another two hundred stuff..


RAJENDRAN K
டிச 04, 2025 12:47

ஜால்ரா போடவில்லையே நடப்பு எதுவோ அதை பேசி உள்ளார்..


rengaraju seenivasan
டிச 04, 2025 12:36

இங்கே அண்ணாமலை அண்ணாவையும் அண்ணா திமுக வையும் விமரிசிக்கும்போது அவர்கள் வாய் திறப்பதில்லையே


Mahendran Puru
டிச 04, 2025 03:01

இதில் பாஜகவினர் வருத்தப் படுவது ஏனோ? உண்மையை பேசியுள்ளார். கையாலாகாத டெல்லி மற்றும் மத்திய அரசுகள் என்ன செய்கிறார்கள்? தலைமை நீதிபதியே மூத்த வழக்கறிஞர்கள் காணொளி மூலம் நீதி மன்ற நடவடிக்கையில் கலந்து கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டார். தம்பித்துரையாவது மக்கள் பிரச்சினையை மக்கள் மன்றத்தில் எழுப்பினாரே. பெயர் மாற்றம் மட்டும் செய்து விளம்பரம் தேடும் பாஜக அரசு பொறுப்போடு செயல்பாடுகளை முன்னெடுக்கட்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 04, 2025 00:56

உலகிலேயே மிக மாசுபட்ட காற்று இருக்கும் நகரங்களில் முதலிடம் இருக்கும் தலைநகரம் டில்லி. அதை பற்றி பேசுவது கூட இவர்களுக்கு நெருக்கடி என்றால் அந்த பிரச்சினைக்கு ஏதாவது ஒரு செயல்திட்டத்தை பற்றியாவது என்றைக்காவது பேசியிருக்க வேண்டும். உலக வெப்பமயமாதல் குறித்து குழந்தைகள் கேட்ட கேள்விக்கு, அப்படி மாற்றம் ஒன்றுமில்லை, நமக்கு வயது அதிகமாவதால் தான் அப்படி உணர்கிறோம் என்று அதிபுத்திசாலித்தனமாக கூறியவர் தான். காற்று மாசு பற்றி ஏதாவது சொல்லி ஜோக் அடித்தாலும் அடிப்பார்.


Dr.R.Samuel .Chandrasekaran
டிச 03, 2025 20:45

It is a well known fact that pollution is a perineal problem in India especially in Delhi due to stubble burning in the neighbouring states so what can Mr Thambidurai say in support of BJP, to lie that Delhi has clean air is it?


Krishna
டிச 03, 2025 20:38

Good. Anybody incl RulingAlliance PartyMPs Must Speak for Peoples/ Nations ProblemsIts their Duties than Parties


N.Balasubramanian
டிச 03, 2025 20:12

Age factor aa general speech not polital mind


V Ramanathan
டிச 03, 2025 16:51

இந்த ஆள் சீக்கிரமே திமுகவிற்குத் தாவிவிடுவார் பாருங்கள். அதற்குத்தான் இது முதல் படி


Vijayakumar Vijay
டிச 03, 2025 13:33

உண்மையை உணர்ந்து சொல்வதற்கு தான் எம்பிக்கள் ஜால்ரா வேலை செயவதற்கா அனுப்புகிறோம்


Subramanian N
டிச 03, 2025 21:49

முந்திய அரசு இறுக்கிறபோது இவர் என்ன பண்ணினார்.


ஜெய்ஹிந்த்புரம்
டிச 04, 2025 04:41

கடந்த 2014 முதல் 2019 வரை, லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, லோக்சபாவில் பேசும் போது, மத்திய பா.ஜ., அரசை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை