வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எனக்குகூடத்தான் ஸ்டாலின் என்ற ரஷ்ய பெயர் முதல்வருக்கு இருப்பதில் சங்கடம் இருக்கிறது. தமிழில் பெயர் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. தினம் டிவி இல் பார்க்கும் போது கேட்கும்போது நாம் என்ன ரஷ்யாவிலேயா இருக்கிறோம் ? ஒரு தமிழ் பெயர்கூட கிடைக்கவில்லையா என்றெல்லாம் தோன்றுகிறது. இதுதான் திமுக தமிழ் வளர்த்த லட்சணமா ? முதல்வர் அவர்கள் தன்னுடைய பெயரை தமிழில் மாற்றிக்கொள்வாரா ? ஏன் தமிழ் பிடிக்கவில்லையா ?
பத்மஸ்ரீயையும் தமிழ்ப்படுத்தி போட்டுக் கொள்ளலாம்தான். ஆனால் அதை தாமரைத்திரு என ஆக்கினால் பாஜகவின் நபரென போய்விடுமோவென மொழி மாற்றாமல் விருதை அனுபவிக்கிறார்கள்.
மும்மொழிக் கொக்கையையும், தேசிய கல்விக் கொள்கை 2020ஐயும், ஹிந்தியையும் திணிக்காமல் எந்த பெயரில் திட்டம் வந்தாலும் எங்கள் தமிழ்நாட்டுக்கும், எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏற்புடையதே...
கனி பாய் நம்ம பெயரிலேயே ஹிந்தி இருக்கே ? தமிழுக்கு மாற்ற உதவி தேவையா
திராவிஷ திருட்டு கும்பலால் ஸ்டிக்கர் ஒட்டி , மோசடி செய்யப்படும் எல்லா மத்திய அரசு திட்டத்துக்கும் மேலும் நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்
இன்னும் ஒரு வருடம் தான் அடுத்த வருடம் நிச்சயம் இவர்கள் ஆட்சி இருக்காது அப்பொழுது மூன்று மொழி என்ன ஐந்து மொழி கூட படிக்க வைத்துக் கொள்ளலாம்
பகல் கனவு
காசா பணமா? சும்மா ஆளாளுக்கு வாய்க்கு வந்த காரணங்களை அடிச்சு விடுங்கள், யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை!
தமிழகத்தில் உள்ள நாற்பத்தி ஒன்பது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழாசிரியர் நியமனம் செய்யப்படவில்லை என்று ஆர் டி ஐ மூலம் மத்திய பாஜக அரசு தெரிவித்துள்ளது. கே வி பள்ளிகளில் மூன்றாவது மொழியாக மாநில மொழி கற்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று பொய்யாக பிரசாரம் மட்டும் செய்து விட்டு அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.காரணம் கேட்டால் ஒவ்வொரு வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களில் குறைந்தது இருபது பேர் மாநில மொழி கற்க விருப்பம் தெரிவித்தால் மட்டுமே இதை நடைமுறைப் படுத்தலாம் என்றும் சட்டம் போட்டுள்ளனர். ஆக மொத்தத்தில் தமிழக கே வி பள்ளிகளில் தமிழ் மொழி பாடம் வெறும் பேப்பரில் மட்டுமே உள்ளது.இது தான் மத்திய பாஜக அரசின் உண்மையான முகம்.கபட நாடகம் ஆடுகின்றனர்.
தமிழக அரசுப் பள்ளிகளிலும் ஆயிரக்கணக்கான தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்றாண்டு கூட ஏராளமான மாணவர்கள் தமிழில் தோல்வி. ஊரைக் குறை கூறும் முன் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
பத்மஸ்ரீ கொடுத்தா ஆட்சேபிக்காமல் போட்டு கொள்கிறார்கள். ஆனா பிஎம்ஸ்ரீ பெயர்தான் பிரச்சனை. 21 ம் பக்க இயல்புதான் இந்த மனநிலைக்குக் காரணம்.
நீங்களும் மும்மொழி கொள்கையை ஏற்க்க வேண்டாம், அவர்களும் நிதியை தரமாட்டார்கள்....தகுதியே இல்லாத அரசு பள்ளிகளில் என் மக்களும் படிக்கிறார்கள் என்று பெற்றோர்கள் புலங்காகிதம் அடைந்து.. பிள்ளைகளை உங்களை போலவே கொத்தடிமை ஆக்கி அவர்கள் வாழ்வை நாசமாக்குங்கள்....மும்மொழி கொள்கையை வேண்டாம் என்று சொல்லுபவர் பிள்ளைகள் ஐந்து மொழி பாடங்களை படித்து முதலாளிகளாய் மாறட்டும்....தமிழகம் உருப்படும்....!!!
இந்த திராவிட மாடல் அரசுகள் அதிமுக சரி திமுகவும் சரி மத்திய ஒன்றிய அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தை தான் இங்கு முதலமைச்சர் காப்பீடு திட்டம் என்று கொடுத்து கொண்டு உள்ளார்கள். இந்த முதலமைச்சர் காப்பீடு திட்டம் முழுக்க முழுக்க மத்திய ஒன்றிய அரசின் பணத்தின் மூலமாகவே நடக்கிறது. தற்போது முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டையில் சிஎம்கேடி மற்றும் பிஎம்ஜெவொய் என்றே குறிப்பிட்டு கொடுக்கிறார்கள். கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று தமிழகத்தை பூர்வீகமாக இல்லாமல் சமீபத்தில் தமிழகத்தில் வந்து குடியேறியவர்கள் நல்ல சிகப்பு நிறமாகவும் இருப்பவர்களுக்கும் கொஞ்சம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கும் போட்டி போட்டு கொண்டு திமுக அதிமுக உள்ளாட்சி நிர்வாகிகள் கொடுக்கிறார்களே அது கூட பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து ரூபாய் இரண்டே முக்கால் இலட்சம் பெற்று கூட எழுபத்தி ஐந்தாயிரம் போட்டு மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ஆக கொடுக்கிறார்கள். அது தற்போது கட்டுபடி ஆகவில்லை என்று தான் நமது மாண்புமிகு மிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சமீபத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மூன்றறை இலட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். இது போல் எல்லா நல திட்டங்களையும் இவர்கள் மத்திய அரசின் நிதியிலே செலவு செய்கிறார்கள். அப்புறம் இந்த தமிழக அரசின் நிதி எங்கே செல்கிறது. அமலாக்க துறை விரிவான விசாரணை நடத்தி கண்டுபிடித்து இந்த திமுக அதிமுக இரட்டை இரயில் என்ஜின் தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும்.
அய்யோ ஜெயச்சந்திரன் அவர்களே மறந்து போய் இரண்டு இடத்தில் மத்திய அரசு என்று குறிப்பிட்டு மாபெரும் தவறை செய்து விட்டீர்கள்....அது மத்திய ஒன்றிய அரசு என்றல்லவா இருக்க வேண்டும்....இது நம் கொள்கைக்கு இழுக்கு அல்லவா ??? பிறகு நம்மை பாஜகவின் B டீம் என்று சொல்ல வாய்ப்பு கொடுக்காதீர்கள்....!!!