உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!

முதல்வர் நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டோர் உயிரிழப்பு; தி.மு.க.,வே இழப்பீடு தரவேண்டும்!

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்துச் சென்றதில், உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு, தி.மு.க., நிதியில் இருந்து தலா, 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: கடந்த பிப்., 22ல் விருதாச்சலம் அருகே, திருப்பெயர் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற, 'பெற்றோரை கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வலுக்கட்டாயமாக மக்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து, வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ff6ia8s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களை அழைத்து வந்த தி.மு.க.,வினர், ஆடு, மாடுகளை போல், லோடு வாகனங்களில் ஏற்றி வந்தனர். பழையப்பட்டினம் கிராமத்தில் இருந்து, டாடா ஏஸ் வாகனத்தில், 30க்கும் மேற்பட்டோரை, அழைத்து வந்தபோது, அந்த வாகனம் பாரம் தாங்காமல், பள்ளத்தில் கவிழ்ந்தது.அதில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவத்தன்று குப்புசாமி என்பவர் இறந்து போனார். விபத்தில் காயமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, வேம்பரசி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இறந்து விட்டார்.தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராதாகிருஷ்ணன் என்பவர், நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். மேலும், இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். விபத்தில் இறந்து போனோர் குடும்பத்திற்கு, தி.மு.க.,வினர் தலா, 25 லட்சம் ரூபாயை உடனே இழப்பீடாக வழங்க வேண்டும்.விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடாக தலா, 10 லட்சம் ரூபாய் உடனே வழங்க வேண்டும். இதை தி.மு.க., நிதியில் வழங்க, அக்கட்சியின் தலைவர் என்ற முறையில் முதல்வர் ஸ்டாலின் ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில், தமிழக பா.ஜ., சார்பில், தி.மு.க.,வை எதிர்த்து, கடலுாரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டமும், தொடர் போராட்டங்களும் நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

NACHI
மார் 06, 2025 20:29

திமுகவை நம்பினால் இது தான் நிலைமை


naranam
மார் 06, 2025 15:57

எல்லாம் அந்த ரஷ்யா சர்வாதிகாரி பெயர் மகிமை


Balasubramanian
மார் 06, 2025 12:28

அவர்கள் கள்ள சாராயம் குடித்து இருந்தால் பத்து லட்சம் வழங்கலாம்! கூடத்திற்கு வந்து இருந்தால் பிரியாணி கிடைத்து இருக்கும்! விபத்து மாதிரியான சாதாரண நிகழ்வுக்கு நஷ்ட ஈடு எப்படி வழஙகுவது


orange தமிழன்
மார் 06, 2025 10:56

இந்த மக்கள் படிப்பு அறிவு பெற்று விட கூடாது என்பதற்கான இரு மொழி மட்டும் அரசு பள்ளியில் அதுவம் தரமற்றதாக இருக்கிறது. எல்லோரும் மொழியை பற்றி மட்டும் பேசுகிறார்கள்.. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, குறைவான ஆசிரியர்கள் மற்றும் பல விஷயங்கள் கவலை அளிப்பவை.. அடி தட்டு மக்கள் படிப்பு அறிவு பெற்று வேலை வாய்ப்பையும் பெற்றால் இப்படி பிரியாணிக்கு சாராயத்திற்கும் செல்வார்களா.......


மாலா
மார் 06, 2025 10:56

வலுக்கட்டாயம் எல்லாம் கிடையாது காசுனு சொன்னா ஓடி வந்து ஏறிக்கு வாங்க


Rajasekar Jayaraman
மார் 06, 2025 10:49

அருமை அருமை செய்யுங்கள் நண்பரே.


Matt P
மார் 06, 2025 10:17

இனிமேலாவது இப்படி எல்லாம் அழைக்கிறார்கள் என்றால் யாரும் போகாதீர்கள். தமிழ் நாடு இந்த அளவுக்கு இருக்கிறது மக்கள் கூட்டத்துக்கு கூட்டிட்டு போய் பிரியாணி சாப்பிட்டால் தான் ஒரு வேளை உணவு என்ற நிலையில். தலைவர் குடும்பம் வாழ்ந்தால் நாட்டு மக்களே வாழ்ந்த மாதிரி.


Sesh
மார் 06, 2025 09:55

வாய்ப்பில்லை ராஜா . ஒன்லி போர் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்தான் இழப்பீடு தகுதி .


ஆரூர் ரங்
மார் 06, 2025 09:26

அட்வான்சாக கொடுத்த 200 போதும். இழப்பீடு கொடுத்தா வேறு வேலைக்கு போகமாட்டான்.


கண்ணன்,மேலூர்
மார் 06, 2025 09:10

திருட்டுக் களவானி திமுக பயல்கள் கொடுத்துட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள்.


A Viswanathan
மார் 06, 2025 13:11

வாய்ப்பில்லை ராஜா.


சமீபத்திய செய்தி