வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐயா, தரம் எல்லாம் சரியாகவே உள்ளது. பீஃஸ் ஏன் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடு ? அதை வைத்துத்தானே அரசியல் விளையாட்டு ?
மாநிலப் பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுவதன் ஒரே நோக்கம் போலி திராவிட பொய்களை சிறார்கள் மனத்தில் விதைக்கவே.
மத்திய அரசு கட்டுபாடுகள் சிறந்தது. ஏன் கிராம நிர்வாகம் வந்தால் எப்படி இருக்கும்
கல்வியென்பது அரசின் சேவைகளிலிருந்து தனியாருக்கும் அனுமதி என்ற நிலை வந்தபின் சேவை என்பதுபோய் தமிழிலேயென்றாகி தற்பொழுது வியாபாரமாக மாறியுள்ளது. மேனஜிமென்ட் கோட்டா என்றுசொல்லிக்கொண்டு தற்பொழுது அவற்றிற்கு விலை நிர்ணயம் நிர்ணயம்செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதில் தகுதி என்ற சொல்லே அடிபட்டுபோய் பணம் மட்டுமே பிரதானமாக நிற்கின்றது. இதற்க்கு துணைவேந்தர் பதவிமுதல் மருத்துவ மாணவர் சேர்க்கைகள் வரை உள்ள பணப்பரிமாற்றம் உதாரணம். அதனால் மிகவும் கீழே போயுள்ள கல்வித்தரத்தையும் நாடு முழுவதும் ஒரேமாதிரியான கல்வித்தரத்தையும் கொண்டுவர ஏற்படுத்தப் பட்டுள்ளதுதான் மத்திய பட்டியல் மற்றும் புதிய கல்விக்கொள்கை. இதில் தனியார் முதலீட்டாளர்கள் பாதிப்படைவதால்தான் தற்போதைய விவாதங்கள் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதற்க்கு பின்னால் அரசியல் பின்னணி உள்ளது. ஆனால் தமிழகம் போன்ற மாநிலங்கள் இரண்டு கொள்கைகளையும் ஆதரிப்பதாகத்தான் தெரிகின்றது. அதாவது நிதி மத்திய அரசை சேர்ந்தது. உரிமை மாநில அரசை சேர்ந்தது. அப்படியிருந்தால்தான் மத்தியநிதியில் புகுந்து விளையாடமுடியும்.
பள்ளி கல்வி மாநிலம் உயர் கல்வி நடுவண். உயர் கல்வி தனியாரிடம். பள்ளி கல்வி 100% மாநிலம். தனியார் கூடாது.
கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு கொடுப்பதில் பெரிய பிரச்சனை உள்ளது. ஒன்று, மத சார்பின்மை என்ற பெயரில் பழந்தமிழ் இலக்கியங்களை கல்வியிலிருந்து முழுமையாக நீக்கி விடுவார்கள். நமது தமிழரின் கலாச்சாரமும் இந்து மதத்தின் கலாச்சாரமும் பழந்தமிழ் இலக்கியங்களில் பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்றை மட்டும் நீக்க முடியாது. அன்றைய பல பழந்தமிழ் புலவர்களும் நாட்டை ஆண்ட அரசர்களும் தமிழையும் சமஸ்கிருத்தையும் இணையாக இரு கண்களாக பார்த்தார்கள். தெய்வ நம்பிக்கை அவர்கள் ரத்தத்தில் ஊறியிருந்தது. அவர்களின் தனி இலக்கியங்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் அதே வேளையில் மதத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் வாழ்க்கை நெறி முறைகளையும் போற்றி வந்துள்ளது. கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால் பழந்தமிழ் இலக்கியங்கள் நீக்கப்பட்டு இவர்களின் அடிவருடிகள் வாந்தி எடுத்தவை பாடமாக ஆக்கப் படும். ஏற்கனவே இவர்கள் இப்படி செய்யப் போய்த்தான் இன்று சரியாக தமிழ் பேச ஆளில்லாமல் போயிற்று. மேலும் இவர்கள் கையில் அதிகாரம் வந்தால் துணை வேந்தர் முதல் பேராசிரியர் வரை அரசியல் தேர்வுதான் நடக்கும். ஊழலில் பிடிபட்ட துணை வேந்தர்கள் கதை நாடறியும். இவர்களுக்கு மத்திய கல்வி முறையில் என்ன குறை என்பதை வெளிப்படையாக விவாதித்து அனுமதி பெறலாம். இதன் வெளிப்பாடுதான் மாநிலப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. CBSE பள்ளிகள் கூட்டம் அதிகரிக்கிறது. இவர்கள் எண்ணம் மாநிலங்களை தனி தீவாக சிறு அரசாங்கமாக ஆக்கி அனுபவிக்க வேண்டும். நேர்மை என்றோ இரண்டு போய்விட்டது.