உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சவால் விடும் திரிணமுல்; சமாளிக்குமா தேர்தல் கமிஷன்?

சவால் விடும் திரிணமுல்; சமாளிக்குமா தேர்தல் கமிஷன்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்., அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் கமிஷனை எதிர்த்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்த வலியுறுத்தியும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 4ம் தேதி மிக பிரமாண்டமான பேரணி நடந்தது. எச்சரிக்கை 'இது வெறும் ஆரம்பம் தான். வாக்காளர் பட்டியலில் இருந்து உண்மையான வாக்காளர் ஒருவரது பெயரை நீக்கினால் கூட, டில்லியில் தேர்தல் கமிஷன் அலுவலக வாசல் முன், லட்சம் பேர் திரண்டு போராட் டம் நடத்துவோம்' என, திரிணமுல் காங்., எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டிருக்கும் தேர்தல் கமிஷனுக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், அரசியல் சார்ந்த இந்த பிரச்னையை அப்படியே சூடு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறார் மம்தா. உண்மையான வங்காள வாக்காளர்களை நீக்குவதற்காக, கண்ணுக்கு தெரியாமல் மிக அமைதியான முறையில் இந்நடவடிக்கையை பா.ஜ., எடுத்திருப்பதாக மம்தா குற்றஞ் சாட்டுகிறார். 'மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு கோடி பேரின் பெயர்களை நீக்குவதே அவர்களது திட்டம். நீக்கப்பட்டவர்களை அகதிகள் முகாம்களுக்கோ அல்லது மீண்டும் வங்கதேசத்திற்கோ அனுப்பிவிட்டு, அதிகாரத்தை கைப்பற்ற பா.ஜ., திட்டம் போடுகிறது' என்று, திரிணமுல் காங்., கூறி வருகிறது. அதாவது மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதற்கான உளவியல் ஆயுதத்தை திரிணமுல் கையில் எடுத்திருக்கிறது. போராட்டம் திரிணமுல் காங்., - எம்.பி.,யான பாலா தாக்குர், 'ஏழை வாக்காளர்கள், சிறுபான்மையினர் மற்றும் மத்துவாக்களை குறிவைத்தே தீவிர திருத்தப்பணி என்ற சதி அரங்கேற்றப்பட்டுள்ளது' என விமர்சித்துள்ளார். 'வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு மத்துவா பெயர் நீக்கப்பட்டால் கூட, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அதே சமயம், மத்தியில் ஆளும் பா.ஜ., இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்பட்டமாக மறுத்து வருகிறது. 'நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்பது அவசியமானது. தேர்தல் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடப்பதற்கு இது தேவை. 'தகுதியற்ற, சட்ட விரோத, போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, பா.ஜ., விளக்கம் அளிக்கிறது. 'தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியலில் போலியானவர்கள் இருக்கின்றனர் எனில், கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., எப்படி வெற்றி பெற்றது? இதே வாக்காளர் பட்டியல் தானே அப்போதும் இருந்தது. 'வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால் கூட மத்தியில் பா.ஜ., அரசின் வீழ்ச்சி ஆரம்பித்துவிடும்' என, மம்தா எச்சரிக்கிறார். மாநிலம் தழுவிய போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் முறையீடு என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் திரிணமுல் காங்., சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. மிகப்பெரும் கேள்வி போதாக்குறைக்கு தேர்தல் கமிஷனின் பூத் அளவிலான அதிகாரிகளுக்கு இணையாக, தங்கள் கட்சியில் இருந்து, பூத் அளவிலான 84,000 முகவர்களை திரிணமுல் காங்., நியமித்திருக்கிறது. அதாவது, இவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகளின் நிழல் போல செயல்படுவர். வீடு வீடாக சென்று வாக்காளர் பெயர் சரிபார்க்கும் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை, இவர்கள் பின்தொடர்வர். வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையான பெயர் நீக்கத்தை தடுக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவர். அதே சமயம், பா.ஜ.,வும் இந்த விவகாரத்தில் உறுதியுடன் இருக்கிறது. திரிணமுலுக்கு போட்டியாக, பூத் அளவில் 50,000 முகவர்களை கட்சி சார்பில் நியமித்துள்ளது. ஊழல், வேலைவாய்ப்பின்மை, மோசமான சட்டம் - ஒழுங்கு போன்ற, மாநிலத்தின் உண்மையான பிரச்னைகளை திசைதிருப்பவே, மம்தா பானர்ஜி இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வருகிறார் என பா.ஜ.,வும் தன் பங்குக்கு வாக்காளர்களிடம் விளக்கம் அளித்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுடன் வாக்காளர் திருத்தப் பணியை ஒப்பிட்டு, வழக்கமான நிர்வாக நடவடிக்கையை, அரசியல் பிரச்னையாக திரிணமுல் மாற்றி இருக்கிறது. தேர்தல் கமிஷனின் ஒவ்வொரு நகர்வுக்கும் சவால் விடுத்து வருகிறது. பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் இந்த சவாலை முறியடிக்குமா என்பது தான், தற்போது எழுந்திருக்கும் மிகப்பெரும் கேள்வி. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மணிமுருகன்
நவ 09, 2025 23:49

மம்தா இண்டி கூட்டணி அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் போலி வாக்காளர்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை ராகுல் தேர்தல் கமிஷன் ஆதாரம் கேட்டி தரவில்லை மம்தா 2கோடி பேர் வங்க தேசம் அனுப்பப் படுவார்கள் என்று வங்க தேசத்தினர் இருக்கிறார்கள் என்று அவரே ஒத்துக் கொள்கிறார் தமிழகத்தில் அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுக கூட்டணி சரியான ஆதாரங்களை கொடுத்தால் தேர்தல் கமிஷன் ஒத்துக் கொள்ளும் என்று தெரிந்தும் இரண்டு மூன்று வாக்காளர் வங்கி வைத்திருப்பது அம்பலமாகிவிடும் என்று தான் திரைகதை வசன நாடகம் ஒப்பாரி எல்லாம் இதில் மக்கள் வரி பணத்தை கணக்கு காட்ட வழக்கு கேவலம்ட


S Srinivasan
நவ 09, 2025 22:58

Mr Modi cabinet pl dismiss WB mamta govt you are doing great job in saving this country in forming one more east Kashmir


சந்திரசேகர்
நவ 09, 2025 15:59

மம்தா ஒரு சர்வாதிகாரி போல செயல் படுகிறார். இவருக்கு சரியான ஆளு இந்திராகாந்தி யாகத்தான் இருக்க முடியும். இந்திராகாந்தி இப்போது பிரதமராக இருந்து மம்தா இப்படி ஆடினால் இந்நேரம் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டு இருக்கும். சட்ட ஒழுங்கு அந்தளவுக்கு சீர்கெட்டு உள்ளது. இவர் பங்களாதேஷ் மக்களுக்கும் சேர்த்து ஓட்டுரிமை கேட்கிறார். ஓட்டுக்காக எதையும் செய்வார். ஆனாலும் மேற்கு வங்காளம் மக்கள் நம்மளை போலத்தான் போல. தப்புன்னு தெரிந்தாலும் இலவசத்துக்கு ஓட்டு போடும் மாக்கள்


முருகன்
நவ 09, 2025 13:44

நாட்டில் தேர்தல் கமிஷன் ஒரு அரசியல் கட்சி மாதிரி செயல்பட ஆரம்பித்தது விட்டது


சத்யநாராயணன்
நவ 09, 2025 11:01

ஆமாம் எனக்கு நீண்ட காலமாகவே ஒரு சந்தேகம் உள்ளது இப்பொழுது நடைமுறையில் இருக்கும் தேர்தல் விதிகளால் தகுதியுள்ள எல்லா இந்திய குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டதா என்னைப்போல் எத்தனை கோடி தகுதியுடைய உண்மையான இந்திய குடிமக்களோ தனியார் நிறுவனங்களிலும் சிறு சிறு கடைகளிலும் வேலை பார்த்துக் கொண்டு வேறு வேறு ஊர்களுக்கோ அல்லது வேறு வேறு மாநிலங்களுக்கோ அடிக்கடி பணி மாற்றத்தினாலோ அல்லது வேலை தேடியோ போய்க்கொண்டிருக்கும் சாமானிய குடிமக்களுக்கு ஓட்டுரிமை எப்பொழுதிலிருந்தோ மறுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது ஆனால் இதை எந்த அரசியல் கட்சியும் எந்த தலைமை பொறுப்பு வகிக்கும் தலைவர்களும் இதுவரை சிந்தித்து கூட பார்த்ததில்லை ஒருவேளை அவர்களுக்கெல்லாம் பல கோடி இந்திய குடிமக்கள் இதைப்போல இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நேரம் இல்லையோ என்னவோ அதனால் இந்திய அளவிலும் சரி மாநில அளவிலும் சரி ஆட்சியை கைப்பற்றுபவர்கள் மக்களுடைய பெரும்பான்மையான ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார்கள் என்பதை நான் ஒரு பொழுதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் அப்படியே ஒருவேளை தகுதியுள்ள எல்லா இந்திய குடிமக்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப்பட்டு விட்டது என்றால் எந்த வாரிசுகளும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியாது என்பது என்னுடைய திடமான நம்பிக்கை


Velan Iyengaar, Sydney
நவ 09, 2025 14:54

சத்யநாராயணா எங்களை போன்றவர்கள் உங்களுக்கும் சேர்த்து வரி கட்டுகிறேன். உங்களுக்கு எல்லாம் இலவசமாக கிடைக்குமே. இன்னும் என்ன புலம்பல்... இலவசத்தை பெற்றுக் கொண்டு தலைமுறை தலைமுறையாக ஒரு இனத்தையே அழித்து விட்டு இன்னமும் புலம்பல்...


anantharaman
நவ 09, 2025 08:28

SIR அமல் படுத்தாத வரை மே.வங்காளத்தில் தேர்தல் நடக்காது என்று தே.ஆணையம் தீர்மானம் செய்து, அங்கு ஆட்சியை 5 ஆண்டு முடிந்ததும் கலைத்த பின் என்ன நடக்கும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை