வாசகர்கள் கருத்துகள் ( 37 )
தமிழ்நாட்டுக்கு நடந்தால் சரி
தலைமறைவு வெற்றி கழகம் .....
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் போல அமீத் சா புகுந்த அரசியல் கட்சியும் - ஊ ஊ தான்
திமுகவின் உயர்நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க முடியாது என்று விரட்டி விட்டது. இப்போது காங்கிரஸின் உச்சநீதிமன்றதை விஜய் நாடுகிறார். காங்கிரஸின் பெரிய வக்கீல்களை நாடுகிறார். இது தான் சாக்கு என்று விஜய்யை மிரட்டி, கார்னர் செய்து காங்கிரஸ் தங்கள் கூட்டணிக்குள் இழுத்துக் கொண்டு விடும். வேலை முடிந்தது.
இவர் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் வாடிகனில் இருந்து அனுமதி வர வேண்டும் .....
சரியோ? தவறோ? தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் கைதான அ.தி.மு.க காரர்கள் அத்தனை பேருக்கும் சுப்ரீம் கோர்ட் வரை சென்று அ.தி.மு.க கட்சி வழக்கறிஞர்கள் வாதாடி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப் பட்டு பின்னர் விடுதலை செய்யப் பட்டனர். தன் கட்சிக் காரர்களை விட்டு விடாமல் அவர்கள் விடுதலைக்கு தொடர் முயற்சி எடுத்தவர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி.ஜெயலலிதா. ஆனால் த.வெ.க வில் என்ன நடக்கிறது? எனக்கு ஒன்றும் தெரியாது எல்லாவற்றிற்கும் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன்தான் காரணம் என நீதி மன்றத்தில் எஸ்கேப் ஆகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி. ஆனந்த். இதுவரை எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அதே போல் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தானும் ஆறுதல் சொல்லாமல் ,சொந்த கட்சிக் காரர்களையும் இதுவரை ஆறுதல் கூற போகச் சொல்லாமல் சைலண்ட் மோடில் அக்கட்சியின் தலைவர் விஜய். வழக்கு தொடுக்கப் பட்ட முன்னணி தலைவரான நிர்மல் குமாரும் எஸ்கேப், ஆதவ் அர்ஜுனா டெல்லி போனதாக சொன்னார்கள் .ஆள் என்ன ஆனார் ? என்றே தெரியவில்லை. கட்சியில் புதியவரான கரூர் மாவட்ட செயலாளருக்கு புஸ்ஸி. ஆனந்தை மீறி அப்படி என்ன வானளாவிய அதிகாரமா கட்சியில் உள்ளது? இப்படி மாவட்ட செயலாளரை மாட்டிவிட்டு முன்னணிதலைவர்கள் தப்பித்து தலைமறைவாக ஓடுவதற்கு பதிலாக த.வெ.க என்ற கட்சியையே கலைத்து விடலாம். விஜய் மீண்டும் சினிமாவிற்கே நடிக்கச் சென்று விடலாம்.
மிகச் சிறந்த வக்கீல் அணி கொண்ட கட்சி திமுக தான் அதைப் பற்றியும் சிறிது சொல்லலாம் அல்லவா
இது சிறுபான்மை குடும்ப போட்டி உதயநிதி மனைவி வகையறாவா அல்லது விஜய் தாய் வகையறாவா ஆக தமிழ்நாடு மக்கள் இரத்தம் உறிஞ்சும் சினிமா பண முதலையின் அடிமைகள்
ஹெரோய்ஸ்ம் ஏலம் அரசியிலில் ஏடுபடாது அது திரையோடு சரி என்பதி விஜய் இப்போ உணர்ந்து இருப்பாரு அவருடன் உள்ளவர்களே துண்டைக்காணோம் துணிய காணோம் என்று ஓடி விட்டார்கள் பாவம் விஜய் பேசிச்சை கேட்டு முடிவெடுத்து ள்ளார் இப்போ அதுவே பாசக் பிரே ஆகி விட்டது ரஜினி வழிதான் விஜய்க்கு நல்லது
ஆனந்த் engapa
நேர்மைக்கு குட்பை, மனசாட்சியை மூட்டை கட்டி விட்டு, த.வெ.க எனும் முதலீடு, தனது லட்சியம் அரசியல் அதிகாரத்துடன் மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் எனின் அதை நோக்கி பயணித்து தான் ஆக வேண்டும். தான் விழுந்து விட்டதாக நினைத்தால், பிறர் உதவி கொண்டு எழுந்து, தன்னை பக்குவ படுத்தும் வரை பிறரோடு பயணிக்கலாம். சிக்கல்களில் இருந்து விடுதலை, பிறகு பயணம், அவர்களின் ஆலோசனை படி. அல்லது தனது வாழ்க்கையே தொலைத்து விட்டதாக நினைத்தால், தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும். அதே கரூரில் அவர்களை சந்தித்தால், இருவருக்கும் மிக பெரிய ஆறுதல். அவர்கள் கருத்தே விஜய்க்கு தெளிவு தரும். கட்சி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்து, நிர்வாகிகள் கருத்துகளையும் கேட்டு அறிய வேண்டும். முடிவு எடுக்க வேண்டும். எல்.சி.டி திரைகள் மூலம் திட்டமிட்டப்படி கூட்டங்கள் நடத்த வேண்டும். யார் பெற்ற மகனோ, யார் பெற்ற மகனோ. ஊர் தூற்றிடும் நிலை ஏன் வந்ததோ. உயிரை பணத்தால் உடனே விலை பேசும் உலகில். மனமே மனமே நீ உருகாது இரு.மக்கள் மனதில் மகுடம் கொண்டாய். மரணம் தந்த வலியில் மயங்கி நின்றாய். வாழ்வின் திசையில் சில வழுக்கல்கள்.. வாழும் வரை மோதி பார். அறிந்து செய்யாத அவலம் ஒன்று. அழகிய பயணம் பாதியில் இன்று. மனமே மனமே நீ உருகாது இரு.
எதுக்கு இவ்வளவு பெரிய முட்டு கொடுக்கணும்......இவர் அரசியலில் ஆரம்பமோ முடிவோ அல்லவே?