உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி

விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி பற்றி, சி.ஆர்.பி .எப்., அதிகாரிகளிடம், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய்க்கு, மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 11 பேர், 24 மணி நேரமும் விஜயின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 'ஒய்' பிரிவு பாதுகாப்பை மீறி, சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்த அருண், 24 என்பவர் புகுந்தார். இது, விஜய் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதை, அம்பலப்படுத்தியது. இந்த நிலையில், கடந்த செப்., 27ல், கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர். விஜய் மீதும் செருப்பு வீசப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. இக்கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன. தொடர்ந்து, விஜய்க்கான பாதுகாப்பு பணியில் குளறுபடிகள் நீடிப்பதால், அது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.ஆர்.பி.எப்., அதிகாரிகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், சி.ஆர்.பி.எப்., வீரர்களிடம், டில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajkumar Ramamoorthy
அக் 03, 2025 11:40

விஜய் மேல் மக்களுக்கு ஒரு பரிவு இருப்பதை காண முடிகிறது. இருந்தாலும் நிற்க கூட முடியாமல் இருக்கும் மக்களை கண்டு ஆதங்கமே வரவில்லையே அவருக்கு. முதல் நிலை இரண்டாம் நிலை தலைவர்கள் இல்லாமல் பௌன்சர்கள் இருந்தால் கட்சி எப்படி உருப்படும். மக்களுக்க வேலை செய்பவன் வீதியில் எறங்கி நடக்க வேண்டும். தன்னுடைய தொண்டர்களை தடிஅடி செய்யும் போது பேசாமல் செல்வது என்ன நியாயம். திமுக அதிமுக பிஜேபி, மாற்றாக இளைய தலைமுறை வாக்காளர்கள் எதிர் பார்க்கிறார்கள் என்பது உண்மை. உண்மையை சொல்லி நண்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும். விஜய் வளர்வதை திமுக, அதிமுக , பிஜேபி போட்டு தள்ள பார்க்கிறது நிதர்சனமான உண்மை. மூளை இருந்தால் நல்லவர்கள் துணை கொண்டால் இதில் இருந்து மக்கள் செல்வாக்கோடு விஜய் வெளியே வரலாம்.


ஆசாமி
அக் 03, 2025 12:14

comedy


Rengaraj
அக் 03, 2025 11:31

பாதுகாப்பு பற்றி கண்டிப்பாக கவலைப்பட வேண்டும். மத்திய அரசு நினைப்பது சரிதான். இங்கே ஒரு அரசியல் கட்சி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் விஜய் கட்சியை யோசிக்கக்கூடாது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் செருப்பு வீசினவங்க, விஜய் உயிருக்கோ, அல்லது கூடியிருக்கும் கூட்டத்தில் இருக்கும் மக்கள் உயிருக்கோ ஆபத்தை விளைவிக்கும் வேறு ஏதையாவது வீசியிருந்தா என்ன ஆயிருக்கும்னு யோசிக்கவேண்டாமா? அதற்கு யார் பொறுப்பு. ? மாநில அரசுக்கு இதில் சம்பந்தம் எதுவுமே இல்லையா ?


Yasar Arafat Yasar Arafat
அக் 03, 2025 10:39

விஜய் ஏன் பிஜேபி உதவியே நாடுகிறார்?


visu
அக் 03, 2025 11:15

பிஜேபி உதவியை நாட வில்லை மத்திய அரசு உதவியை நாடுகிறார் மாநில அரசால் பிரச்சினை என்றால் வேற யாரிடம் கேட்கவேண்டும்


நிக்கோல்தாம்சன்
அக் 03, 2025 12:04

அது எப்படி பிஜேபி உதவி என்று கூறுகிறீர்? சில பல தலைவர்-கள் அரசியல் காரணங்களுக்காக நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்ட பின்னர் ஒரு குடும்ப கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்ததை தமிழகம் கண்டுள்ளது, அந்த கட்சி மீண்டும் அதே போல் செய்யாது என்பதற்கு என்ன அத்தாட்சி


Barakat Ali
அக் 03, 2025 09:02

சாதாரண மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை ........


ஆசாமி
அக் 03, 2025 08:12

மத்திய அரசு என்ன சாமரம் வீசினாலும் அவன் எட்டி உதைக்கத்தான் போறான்.


பாலாஜி
அக் 03, 2025 08:07

ஜோசப் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கும் நாடகம் நடத்தி பாஜகவில் இணைத்துகொள்ளும் முயற்சி வெற்றி பெறுமா?


Natchimuthu Chithiraisamy
அக் 03, 2025 09:58

அங்கு ஓடுகிறது என்ன செய்ய


Svs Yaadum oore
அக் 03, 2025 07:23

கல்வியில் சிறந்த தமிழ் நாடு என்று சினிமாக்காரனுங்களை மேடையில் ஏற்றி சொல்ல வைத்து தமிழ் நாட்டில் சினிமா மூலம் கல்வியை கட்சியை வளர்த்த திராவிடம் .....இப்பொது மட்டும் சினிமாக்காரன் என்றால் விடியலுக்கு கசக்குதா ??...


ஜெய்ஹிந்த்புரம்
அக் 03, 2025 06:02

அப்போ கலவரத்தையும் பண்ணிட்டு பாதிகாப்பையும் ஏத்தியாச்சா? மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிட்டா அப்புறம் வெரட்டி விட்டுருவாங்க சேட்டு


Thravisham
அக் 03, 2025 10:47

எங்க ஒன்னோட பங்களாதேஷுக்கா?


V Venkatachalam
அக் 03, 2025 11:18

தான் கையேந்தும் போது விழும் நாலு காசுக்கு அதை பேசாட்டா எப்புடி? என்னதான் கையேந்துனாலும் எனக்கு ஒரு மூலையில மனசாட்சி இருக்கு. ஆனா அது மழுங்கி போய் இருக்கு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை