வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதியின் கேள்விக்கு எழுந்த விமர்சனங்கள் சவுக்கு சங்கர் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்வி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதம் எழுந்துள்ளது. "கைதாகி ஜாமினில் வந்தவர் தானே?" என்ற நீதிபதியின் கூற்று, பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருத்து ஊழலை ஆதரிப்பதாகவும், நீதிபதி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வெளியான கருத்துகளைப் பார்க்கும்போது, உச்சநீதிமன்ற நீதிபதியின் இந்தக் கேள்விக்கு ஆதரவாக எந்த ஒரு கருத்தும் இல்லை. மாறாக, பலரும் நீதிபதியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர். "ஊழலை ஆதரிப்பவர்," "மோசமான நபர்" போன்ற கடுமையான சொற்களால் நீதிபதியைக் குறிப்பிட்டிருப்பது, பொதுமக்களின் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது. பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீதான நம்பிக்கை மிகவும் முக்கியம். இது போன்ற கருத்துகள் நீதித்துறை மீதான மரியாதையையும், அதன் நடுநிலைமையையும் கேள்விக்குள்ளாக்கலாம். ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி எழுப்பும் கேள்விகள், சட்டரீதியாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
இது போன்று நம்ம ஐந்து கட்சி அம்மாவாசையிடம் கேட்க திராணி இருக்கா? கேட்க முடியாது. ஏனென்றால் காந்தி கோபித்துக் கொள்வார்.
முதல்ல இவங்களை ஸ்கூல் பசங்க மாதிரி, கோடை/தசரா/கிருஸ்துமஸ் விடுமுறை எடுக்காமல் வேலை பார்க்க சொல்லுங்க. பிறகு மத்தவங்களை பற்றி கருத்து சொல்லலாம்.
ஏன் கைதாகி ஜாமீனில் வந்த ஒருவர் இதற்கு முன் வழக்கு தொடர்ந்ததே இல்லையா? மூல வழக்கிற்கும் இந்தக் கேள்விக்கும் என்ன சம்மந்தம்?
அப்போ திருடன் திருந்தவே கூடடாதா? வேறொரு திருட்டை பற்றி சொல்லவே கூடாது என்கிறாரா நீதிபதி?
ஜாமீன் கொடுத்ததும் நீதிமன்றம் தானே. ஜாமீனில் நிறைய அரசியல் வியாதிகள் உள்ளன. அவர்களிடம் கேட்க முடியுமா?
நீதிபதிகள் கடவுள்கள் அல்ல அல்ல அல்ல நீங்கள் தவறே செய்யாத உத்தமர்களா சம்பந்தப்பட்ட வழக்கு விபரங்களை கேட்காமல் உங்கள் சொந்த அபிப்பிராயங்களை தலைமை உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் பேச கூடாது மீண்டும் மீண்டும் சொல்ல வருவது நீங்கள் கடவுள்கள் அல்ல அல்ல அல்ல
ஓ, நீதிபதி கூட அவரை நினைவில் வைத்திருக்கிறார் போலிருக்கிறது
சங்கருக்கு பத்ம பூஷன் வழங்கி யூ டுபேறுகளின் சேவைகளை கௌரவிக்கலாம்
ஆமாம், இந்த ஊழல் தலைமை நீதிபதி மூக்கை உடைக்க வேண்டும் என்பதற்காகவே சவுக்கு சங்கர் சேவையை பாராட்டி பத்ம பூஷன் விருது வழங்க வேண்டும்.