உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு

சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்கள் மனு போடவில்லை; கரூரில் உயிரிழந்தோர் உறவினர்கள் திடீர் அறிவிப்பு

கரூர் : 'சி.பி.ஐ., விசாரணை கேட்டு , உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை' என, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், ஏமூர் புதுாரைச் சேர்ந்த, உயிரிழந்த சந்திராவின் கணவர் செல்வராஜ், 55, மற்றும் 10 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம், 32, மற்றும் த.வெ.க., உட்பட ஐந்து பேர் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மதியம், செல்வராஜ், 10 வயது சிறுவனின் தாய் ஷர்மிளா, 25, ஆகியோர், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில், 'உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை; அதை ரத்து செய்ய உதவிட வேண்டும்' என கேட்டு, சார்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான அனுராதாவிடம் மனு அளித்தனர்.

செல்வராஜ் கூறியதாவது:

த.வெ.க., கூட்டத்தில் சிக்கி, என் மனைவி சந்திரா உயிரிழந்தார். இதனால், என் மூத்த மகனுக்கு அரசு வேலையும், கூடுதல் நிதி உதவியும் பெற்று தருவதாக கூறி, ஏமூர் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலருமான பால கிருஷ்ணன், விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்கினார். உச்ச நீதிமன்றத்தில் எங்கள் பெயரில் வழக்கு போடத்தான், இப்படி கையெழுத்து பெறுகின்றனர் என்பது எனக்குத் தெரியாது. எனக்கும், என் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்குக்கும், எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். இங்கே வந்து நான் மனு கொடுப்பது, என் சுயவிருப்பத்தின் பேரில் தான்; யாரும் என்னை மிரட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உயிரிழந்த சிறுவனின் தாய் ஷர்மிளா கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ., விசாரணை கேட்டு, நான் வழக்கு போடவில்லை. என் கணவர் பன்னீர்செல்வம் தான், சி.பி.ஐ., விசாரணை கேட்டார். அவர், எட்டு ஆண்டுகளுக்கு முன், என்னையும், உயிரிழந்த மகனையும் விட்டு பிரிந்து விட்டார். அவருடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. தற்போது, மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்த நிவாரணத் தொகைக்கு ஆசைப்பட்டு, கணவர் பன்னீர்செல்வம் வழக்கு போட்டுள்ளார். அதை, உச்ச நீதிமன்றம் ஏற்கக்கூடாது. பன்னீர்செல்வத்துக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதுகூட எனக்கு தெரியாது. சட்ட உதவி மையத்தில் மனு கொடுக்க என்னை யாரும் மிரட்டவில்லை. சுயவிருப்பத்தின் பேரிலேயே மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்.

விரும்பி தான் கையெழுத்திட்டனர்!

ஏமூர் பஞ்., முன்னாள் தலைவர் என்ற முறையில் அனைவரையும் எனக்கு நன்றாகத் தெரியும். அடிப்படையில் நானும் ஒரு வக்கீல். செல்வராஜ், சுயவிருப்பத்தின் பேரில்தான், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டார். யாரையும் மிரட்டியெல்லாம் கையெழுத்து பெற முடியுமா? இதற்காக, சட்டரீதியான விசாரணை வந்தால், அதை சந்திக்க தயாராக உள்ளேன். - பாலகிருஷ்ணன், தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய செயலர், அ.தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Mani . V
அக் 15, 2025 05:08

ஐந்து கட்சி அமாவாசையின் பவர் என்னவென்று தெரிந்தபின் அவர்கள் பல்டி அடிக்காமல் என்ன செய்ய முடியும்? உயிர்ப்பயம் இருக்கத்தானே செய்யும்?


rama adhavan
அக் 14, 2025 20:09

வக்கீல் தான் உச்சநீதி மன்றத்தில் வாதாடவேண்டும். மனுதாரர் மனுவை கலெக்டரிடம் தான் கொடுத்துள்ளார். வழக்கை திசை திருப்ப.


Sudha
அக் 14, 2025 19:03

காந்தி நேரு இந்திரா காமராஜர் ராஜிவ் போன்ற தலைவர்களையும் நீட் ஹிந்தி போன்ற ஒருமைப்பாடு கொள்கைகளையும் இப்போது அமலாக்க துறை உச்ச நீதிமன்றம் போன்ற நிர்வாக அமைப்புகளையும் ஏளனமும் அவமானம் செய்யும் கொடுமை தமிழகத்தில் மட்டுமே உளளது, மிகவும் வருத்தபடுகிறேன்


hariharan
அக் 14, 2025 18:55

தன் மகளையே தன் மகள் அல்ல என்று ஒருவர் ஒரு காலத்தில் சொன்னார். இதெல்லாம் சகஜமப்பா. பிண அரசியல் செய்பவர்கள் யாரென்று தெரிந்துவிட்டது.


KRISHNAN R
அக் 14, 2025 18:49

சரி


spr
அக் 14, 2025 18:37

திமுகவின் மிக ஆளுமையுள்ள அமைச்சர் கோலோச்சும் பகுதியில் "சி.பி.ஐ., விசாரணை கேட்டு , உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை என, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்." என்று சொல்ல வைப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல சி பி ஐ விசாரணை ஒன்றும் நாளைக்கு காலை தீர்ப்பு சொல்லப்போவதில்லை அதற்குள் நாலு தேர்தல்கள் வந்து போய்விடும் பிறழ் சாட்சியங்கள், விசாரணை அமைப்புக்களுக்கு தமிழக காவற்துறையின் ஒத்துழைப்பின்மை எனப் பலவகையில், விசாரணை நீர்த்துப் போகும் இதெல்லாம் திமுகவிற்குத் தெரியாத விஷயமல்ல அரசே மதிப்பாக அதனை ஏற்றுக் கொண்டிருக்கலாம் எங்குமே இல்லாத எதிர்ப்பு இங்கே எதனால்? விஜய் விவேகமில்லாமல் அங்கே போய் அவரை கிண்டலடித்துப் பாடுவானேன்? அதனால் தொகுதிப் பெரிய மனிதருக்கு இது தன்மானப் பிரச்சினை. அவரே தயங்கினாலும், அவரோ அவரது இளவலோ அடிப்பொடிகளோ அத்தனை எளிதில் வீட்டுக் கொடுக்க மாட்டார்கள். அடுத்துப் பெருமழை வரும் மாநிலம் வெள்ளக்காடாகும் மக்கள் மறந்து போவார்கள் ஆனால் திமுக தா வெ கவை மறைமுகமாக அங்கீகரித்து விட்டது திரு பாண்டே சொன்னது போல, பாஜகவும் அ இ அ தி மு கவுமே நல்லதொரு வாய்ப்பை இழந்தது. மாவட்ட நிர்வாக அதிகாரி எப்படி அவசர பிரேதப் பரிசோதனையை அனுமதித்தார் என்று பெயருக்காவதொரு எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம் தமிழக பாஜக தலைமை அடிமை என்பதால் மத்திய பாஜக அனுமதியில்லாமல் எந்த முடிவும் எடுக்க வாய்ப்பில்லை மத்திய பாஜகவோ பல்வேறு காரணங்களால் திமுகவை நேரடியாக எதிர்க்காது ஆனால் ஈபிஸ் ஏன் கோட்டை விட்டார்?


பேசும் தமிழன்
அக் 14, 2025 18:28

சட்ட பணிகள் ஆணையத்திடம் மனு கொடுக்க வந்தவர்கள் அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல்.... நாங்களாக தான் மனு கொடுக்க வந்தோம் என்று கூறுவது சந்தேகத்தை கிளப்புகிறது....இவர்கள் சொல்வது எப்படி இருக்கு என்றால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.


rama adhavan
அக் 14, 2025 18:24

இது முடிந்து போன கதை. சி பி ஐ விசாரணை வந்து விட்டது. 2 பேர் அழுத்தத்தின் பேரில் கலெக்டரிடம் கொடுத்த மனு ஒரு சப்பை ஆனது. அதை தெரியாமல் பிரபல வக்கீல்கள் உச்சநீதிமன்றத்தில் முறியீடுவது வேடிக்கையாய் உள்ளது. ஆனால் நீதிமன்றம் இதையும் தேவைப்பட்டால் சிபிஐ விசாரிக்கட்டும் என்று சரியாக சொல்லிவிட்டதே.


ஆரூர் ரங்
அக் 14, 2025 15:17

சிதம்பரம் மாணவர் உதயக்குமார் தந்தை கூட இறந்தது தன் மகனல்ல எனக் கூற வைக்கப்பட்டார். இது புதிதல்ல. தீயமுக வின் ஆதிகால டிசைன்.


rama adhavan
அக் 14, 2025 22:23

அந்த காலத்தில் டி என் ஏ டெஸ்ட் நடைமுறை நம் நாட்டில் கிடையாது. இருந்திருந்தால் சாயம் வெளுத்திருக்கும் அன்றே.


Suppan
அக் 14, 2025 14:29

இந்த திமுக ஆட்சியில் கழகக்கண்மணிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். செபாவால் செய்யமுடியாததா என்ன


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை