உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு நிச்சயம் பதில் அளிப்போம்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு நிச்சயம் பதில் அளிப்போம்! தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“ மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுப்பது தொடர்பாக, கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் நிச்சயம் பதில் அளிக்கும்,” என, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் திட்டவட்டமாக தெரிவித் துள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய, 10 மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் மாநில கவர்னர் ரவி நிலுவையில் போட்டு வைத்திருந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. காலக்கெடு இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வு, மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது கவர்னர் மற்றும் ஜ னாதிபதி ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்து தீர்ப்பளி த்தார். இது நாடு முழுதும் விவாதத்தை ஏற்படுத்தியது. 'ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு நீதிமன்றம் எப்படி காலக்கெடு விதிக்கலாம்' என்பது உட்பட, இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம், 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார். இதை தனி வழக்காக, அரசியல் சாசன அமர்வு வாயிலாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது. அதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், நரசிம்மா மற்றும் ஏ.எஸ்.சந்துருகர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. வழக்கு, இந்த அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தை ஆகஸ்ட் மாத மத்தியில் விசாரிக்கலாம் என இருக்கிறோம். 'அதற்கு முன்பாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க விரும்புகிறோம். 'எனவே, அனைத்து மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்' என, நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கேள்வி எழுப்பினார் மேலும், இந்த விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்திற்கு உதவும்படி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையும், சொலிசிட்டர் ஜெனரலையும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அப்போது, கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “ஜனாதிபதி விளக்கம் கேட்ட விவகாரத்தை இவ்வாறு விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “தமிழக கவர்னருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதி கேட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும், ஏப்ரல் 8ல் வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே பதில் அளிக்கப்பட்டு விட்டது,” என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “இது தமிழகம், கேரளா சார்ந்த விஷயம் மட்டும் அல்ல. அனைத்து மாநிலங் களும் தொடர்புடைய விவகாரம். ''அதனால் ஒட்டுமொத்த நாட்டின் நிலைப்பாட்டையும் நாங்கள் கருத்தில் வைக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதி எழுப்பிய, 14 கேள்விகளுக்கு நிச்சயம் இந்த நீதிமன்றம் பதில் அளிக்கும்,” எனக்கூறி, விசாரணையை ஒத்திவைத்தார். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

V Venkatachalam
ஜூலை 24, 2025 16:56

காவாய் அவர்களால் உடனே இதற்கு பதில் சொல்ல முடியாது. அவர் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கிறார். அதுவா அது வந்து ...அது வந்து... நிச்சயம் பதில் சொல்வேன்.‌ இவர் தான் சில வாரங்களுக்கு முன்பு என்னை எதுவும் சொல்ல வைத்து விடாதீர்கள் ன்னு சொன்னார். நாம அதை ஞாபகம் வச்சுக்கணும்.


sankar
ஜூலை 24, 2025 13:50

நாளை தனிநாடு தீர்மானம் போடுவாங்க - அதையும் கவர்னர் ஆமோதிக்கவேண்டுமா


அஜய் இந்தியன்
ஜூலை 23, 2025 23:30

ஜனாதிபதி கேள்வி கேட்டு ஒரு மாதம் கழித்து இந்த பதிலை நீதிமன்ற நீதிபதி நாங்கள் பதில் தருவோம் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இன்னும் பதில் சொல்ல வில்லை. நீதிமன்ற நீதி பதில் சொல்ல இவ்வளவு கால தாமதம் எடுத்து கொள்ளும் போது ஒரு மாநிலத்தின் கவர்னர், ஒரு நாட்டை ஆளும் ஜனாதிபதி ஏன் கால தாமதம் எடுத்து கொள்ள கூடாது. இதை முதலில் DMK கட்சிக்கு தான் யாராவது நன்கு படித்த புத்திமான் அறிவுரை சொல்ல வேண்டும்.


அஜய் இந்தியன்
ஜூலை 23, 2025 23:17

இங்கு ஒரு கவர்னர் மற்றும் ஜனாதிபதி,எப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆளும் திமுக கட்சி கொண்டு வரும் சட்டத்தை ஒரு வாரத்திலோ அல்லது ஒரு மாதத்தில் ஏற்று கொள்ள வேண்டும் என்று நிதி மன்றம் சொல்லுகிறதோ. அதே போல் ஆளும் இந்திய முழுவதும் உள்ள மக்களால் தேர்வு செய்ய பட்ட மத்திய அரசை ஆட்சியை ஆட்சி செய்யும் பாஜக கட்சிக்கு, பாஜக கட்சியால் தேர்வு செய்ய பட்ட கவர்னருக்கும், ஜனாதிபதி க்கும் திமுக கட்சியால் மக்களுக்கு தேவையற்ற வெறுக்க தக்க DMK வின் மனுக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் உண்டு. இங்கு நீதி மன்றம் மீது ஒரு குறையும் சொல்லுவதற்கு இல்லை. இங்கு ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்ய பட்ட DMK எப்படி உரிமை உள்ளதோ, அதே போல் இந்தியாவை ஆளும் மத்திய அரசின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பாஜா கட்சிக்கும் திமுக கட்சியை விட அதிக அதிகாரம் உள்ளது. இதை இந்தியாவில் எல்லோரும் கருத்து, பேச்சு உரிமை உள்ளது என்று சொல்லும் DMK கட்சிக்கு நான் சொல்ல வரும் பதில். மத்தியில் ஆளும் கட்சி திமுக கட்சியை எப்படி கையாள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டியதாக உள்ளது


S Kumar
ஜூலை 23, 2025 21:39

Supreme court needs more than two months time to form a bench to decide on the clarification raised by the President of India. How long the case will go nobody knows.This is the working style of the courts, and what grounds the SC set the timeline for President of India to clear the bill.


Rajasekar Jayaraman
ஜூலை 23, 2025 19:39

ஆக உச்ச நீதிமன்றத்துக்கு சரியான ஆப்பு இருக்கு.


அப்பாவி
ஜூலை 23, 2025 18:41

சூப்பர். தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வெச்சாச்சு. பதில் வர்றதுக்குள்ளே நாலஞ்சு தலைமை நீதிபதிகளும், ரெண்டு மூணு ஜனாதிபதிகளும் மாறிடுவாங்க. கவலை எதுக்கு?


ஆரூர் ரங்
ஜூலை 23, 2025 14:43

இந்த தலைமை நீதிபதியின் தந்தை திரு RS கவாய் காங்கிரஸ் அரசால் கேரள கவர்னராக நியமிக்கப்பட்டிருந்தபோது கேரள ( கம்யூனிஸ்டு) அமைச்சரவையை மீறி பினராயி விஜயன் ஜெனரேட்டர் ஊழலை சிபிஐ ஐ விட்டு விசாரிக்க உத்தரவிட்டார்.அதாவது கவர்னர் அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கு கட்டப்பட்டவரல்ல என்றாகிறது. தந்தை செய்தது சரிதான் என்று மகன் கூறுவாரா?.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 23, 2025 14:15

உச்சநீதிமன்றம் மாநிலங்கள் கொடுத்த பதில்களை ஆராய்ந்து பார்க்கவும் ... பின்னர் வாதாடவும் ஒரு முறையை ற்படுத்தவேண்டும் ... யூனியன் பிரதேசங்களின் சார்பாக ஒருவர் ... bj கட்சி ழும் மாநிலங்கள் சார்பாக ஒருவர் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சார்பாக ஒருவர் என்று வரையறுத்து வாதாட விடவேண்டும் ... இல்லையெனில் இவர்கள் வேண்டும் என்றே வழக்கை இழுத்துக்கொண்டு போவார்கள் ....


R Dhasarathan
ஜூலை 23, 2025 11:27

அதேபோல் வழக்குகளுக்கும் காலக்கெடு வரையறுக்க வேண்டும். அதிக பட்சமாக மூன்று மாதங்களுக்குள் இருதி முடிவு வேண்டும் எப்படிப்பட்ட வழக்காக இருந்தாலும்


முக்கிய வீடியோ