உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தொகுதி பொறுப்பாளர் நியமனம்; தமிழக பா.ஜ.,வில் தாமதம் ஏன்?

தொகுதி பொறுப்பாளர் நியமனம்; தமிழக பா.ஜ.,வில் தாமதம் ஏன்?

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், சட்டசபை தொகுதி வாரியாக நடக்கும் பணிகளை மேற்பார்வையிட, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழக பா.ஜ.,வில் இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், சட்டசபை தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, தேர்தல் பணிகளை கவனித்து வருகிறது. ஆனால், பா.ஜ.,வில் இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கு சரியான, தகுதியான ஆட்கள் இல்லாததே காரணம். அதனால், கட்சிக்காக தீவிரமாக களப்பணியாற்றும் நபர்கள் யார் என பார்த்து, அவர்களை தேர்ந்தெடுத்து தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அவர்களை, மாவட்டத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். தொகுதி பொறுப்பாளர்கள், அங்குள்ள நிர்வாகிகளை, தொண்டர்களை சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும். அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரந்தோறும் பூத் கமிட்டி வாரியாக சென்று, பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகளை கண்காணிக்க வேண்டும். முக்கிய ஓட்டு வங்கியாக உள்ள எஸ்.சி., சமூக மக்களை சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்து, உதவ வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து, கூட்டங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Velayutham rajeswaran
ஆக 09, 2025 12:06

இனி இந்த கட்சி தமிழ்நாட்டில் அவ்வளவுதான் இப்போது கூட கமல்ஹாசனை இங்கே கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறோம் அங்கே பிரதமர் சந்திக்க நேரம் கொடுக்கிறார இந்த கட்சி எப்படி தமிழகத்தில் வளரும்


Sangi Mangi
ஆக 09, 2025 10:39

பா.ஜ.,வில் இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதற்கு சரியான, தகுதியான ஆட்கள் இல்லாததே காரணம்.. ...


vivek
ஆக 09, 2025 14:43

ஒரே கொத்தடிமை சொங்கி கூட்டமா இருக்கு....


மோகன சுந்தரம்
ஆக 09, 2025 10:00

இனி பிஜேபி எங்கே என்று பூதக்கண்ணாடி வைத்து தான் பார்க்க வேண்டும். அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து சென்ற பிறகு அக்கட்சி நோட்டாவிற்கு கீழ் சென்று விட்டது. அந்த இறைவனாலும் காப்பாற்ற முடியாது.


Nada raja
ஆக 09, 2025 09:03

அண்ணாமலைக்குப் பிறகு தமிழக பாஜக செயலிழந்து விட்டது போல் இருக்கிறது எந்த பரபரப்பும் இல்லை அவரை மீண்டும் தலைவராக நியமித்தால்தான் தாமதம் எல்லாம் பறந்து போகும்