உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தங்கம் கடத்தலில் பிடிபட்ட நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கியது ஏன்?

தங்கம் கடத்தலில் பிடிபட்ட நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கியது ஏன்?

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் கர்நாடக அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பேச்சு அடிபட ஆரம்பித்து உள்ளது. இது தவிர ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு 12 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியதும் தெரியவந்துள்ளது.கர்நாடக வீட்டுவசதி கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் மகள் ரன்யா ராவ், 33. நடிகை. துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில், கடந்த 3ம் தேதி இரவு ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.அவர் வீட்டில் இருந்து மேலும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரன்யா ராவை, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தது தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு கொடுத்த தகவலின்படி, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து உள்ளது.

விமான நிறுவனம்

டில்லி, பெங்களூரு விமான நிலைய ஊழியர்களிடம், இரு விசாரணை அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கக் கட்டிகளை, கமிஷன் பணத்திற்காக ரன்யா ராவ் கடத்தி வந்தது தெரியவந்து உள்ளது. ஆனால், அவரை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை, கண்டறியும் பணியில் விசாரணை அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பெங்களூரில் சில நகைக் கடைகளின் உரிமையாளர்களையும், விசாரணை அமைப்புகள், தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர். ரன்யா ராவ், அடிக்கடி துபாய்க்கு பயணம் செய்த, விமான நிறுவனத்திடமும் விசாரிக்க உள்ளனர். ரன்யா ராவ் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தொடர்பாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு, சில நகை கடைகளின் உரிமையாளர்களே தகவல் கொடுத்து இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.ரன்யா ராவ் கைது செய்யப்பட்டவுடன், அவர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்வரின் சட்ட ஆலோசகரான காங்கிரஸ் எம்.எல்.ஏ., பொன்னண்ணா கூறி இருந்தார்.

பதவிக்கு ஆபத்து?

ஆனால், ரன்யா ராவை காப்பாற்றும் முயற்சியில், அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரன்யா ராவின் கணவர் ஜதின், முக்கிய அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஆவார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஜதின் - ரன்யா ராவுக்கு நடந்த திருமணத்திலும், அமைச்சர்கள் சிலர் பங்கேற்று இருந்தனர். இதன்மூலம் சில அமைச்சர்களுடன், ரன்யா ராவுக்கு நல்ல அறிமுகம் இருந்து உள்ளது.குறிப்பாக ஒரு அமைச்சரை, ரன்யா அடிக்கடி சந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தங்கம் கடத்தலில் அந்த அமைச்சருக்கும் தொடர்பு உள்ளதா என்றும், ஒருவேளை உண்மை என்றால் அந்த அமைச்சர் பதவி பறிபோவதுடன், கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட அந்த அமைச்சர் நடுக்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தொழிற்பேட்டை

இதற்கிடையில், ரன்யா ராவ் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு, கர்நாடக அரசு 12 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிய அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது, துமகூரின் சிரா தொழிற்பேட்டையில், 'க்சிரோடா இந்தியா பிரைவேட்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில், ரன்யா ராவும் ஒருவர். இந்த நிறுவனம் சார்பில் இரும்பு தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு, 2023ம் ஆண்டு ஜனவரி 24 ம் தேதி, கர்நாடக அரசின் தொழில் துறைக்கு உட்பட்ட கர்நாடக தொழில் பகுதி வளர்ச்சி ஆணையம், பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதற்கு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்றும், விசாரணை நடக்கிறது. சி.பி.ஐ., நடத்தும் விசாரணை குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று கூறுகையில், ''ரன்யா ராவ் தங்கக்கட்டி கடத்தியது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிப்பது பற்றி ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். வருவாய் புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரிக்கலாம். ஆனால், எங்களிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

A KANIKANNAN
மார் 11, 2025 12:34

Yen என்ற theriyavillai


hariharan
மார் 11, 2025 05:40

இந்த அம்மாவையும் சொப்ன சுந்தரி சொப்னா சுரேஷ் இரண்டுபேருக்கும் சிங்கப்பூரில் கொடுக்கப்படும் சாட்டையடி வைத்தியம் கொடுக்கப்பட வேண்டும்.


பாவா
மார் 10, 2025 17:28

காங்கிரஸ், திமுக மற்ற இண்டி குரூப் எல்லாம் மக்களை கொள்ளையடிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்ளை கும்பல் தான்


venugopal s
மார் 10, 2025 17:11

இவருக்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தது முந்தைய பாஜக ஆட்சியில் என்ற உண்மையை மறைத்தது ஏனோ?


naranam
மார் 10, 2025 14:57

இண்டி கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் இருப்பது போல ஏகப்பட்ட ஸார்களின் ஆதிக்கம் நடை பெறுகிறது. ஊழல் இல்லாத காங்கிரஸ் அரசு உண்டா?


kulandai kannan
மார் 10, 2025 14:29

தென் மாநிலங்களில்தான் இந்த தங்கக் கடத்தல் பிரச்சினை. வடவர்களுக்கு தங்க மோகம் கிடையாது.


Barakat Ali
மார் 10, 2025 14:16

அந்த கர்னாடக அமைச்சரிடமும் கட்டிங் வாங்கி பாஜகவிடம் கொடுத்துவிடும் அமலாக்கம் .........


Ganapathy
மார் 10, 2025 12:28

கடைசிவரை அந்த அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிவராது. சும்மா கீரி பாம்பு சண்டைக்கு வுடறமாதிரிதான் நம்ம நீதித்துறையும் மீடியாக்களும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 10, 2025 10:10

இதுவரை தங்கம் கடத்தி வந்து பிடிக்க பட்டவர்கள் யாரும் தண்டிக்க பட்டதாக 75 வருட இந்தியாவில் சரித்திரம் இல்லை. பைன் கட்டி வெளியே எடுத்து விடுவார்கள். மீண்டும் அடுத்த கடத்தலுக்கு சில பின் பணிக்கு அமர்த்த பட்டு விடுவார்கள். முன்னாள் இந்திய நிதியமைச்சர் ஒருவரை சரியான முறையில் விசாரித்தால் தங்கம் கடத்தல் நிற்கும்.


Ramona
மார் 10, 2025 09:41

யாராலும் எதையும் செய்ய முடியாது, இவரூம் ஒரு நதங்க சொப்னா அவ்வளவு தாங்க...