உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கவர்னர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ., சட்டபூர்வமாக்குவதா? மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி

கவர்னர்களின் முட்டுக்கட்டையை பா.ஜ., சட்டபூர்வமாக்குவதா? மத்திய அரசுக்கு முதல்வர் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், ஜனாதிபதி வாயிலாக, மத்திய அரசு விளக்கம் கேட்பது கண்டிக்கத்தக்கது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக கவர்னர் ரவி தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ளது. இந்த விவகாரத்தில், அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில், ஜனாதிபதி வாயிலாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளது; இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இதன் வாயிலாக, கவர்னர் ரவி, பா.ஜ., துாண்டுதலில்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது. இது, மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசின் ஏஜன்டுகளாக கவர்னர்களின் கட்டுப்பாட்டில் வைத்து, அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சி அன்றி வேறில்லை.இது, சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்பு சட்டத்தை பொருள் கொள்வதில் இறுதி தீர்ப்பளிக்கும் உரிமை கொண்ட உச்ச நீதிமன்றத்துக்கும் நேரடியாக சவால் விடுக்கிறது. கவர்னர்கள் முடுவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படுவதில், எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்?சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில், காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதன் வழியாக, கவர்னர்களின் முட்டுக்கட்டையை, பா.ஜ., சட்டப்பூர்வமாக்க முயல்கிறதா?உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள், அரசியலமைப்பு சட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டசபைகளை திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பா.ஜ., அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக, சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன். ஒட்டுமொத்த ஆற்றலை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sridhar
மே 16, 2025 19:45

சுயாட்சியாவது விளக்கென்னையாவது. உள்ளவச்சு முட்டிபோட்டு உக்கார வைக்கும் போது ஏன்டா பேசினோம்னு வருத்தப்படுவானுங்க. உள்ளுக்குள்ள ஆட்சி பவர் எல்லாம் ஜெயில் சுப்பரின்டென்ட் தான். அங்க ஒன்னும் கேட்கமுடியாது.


Balasubramanian
மே 16, 2025 18:48

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதி! வெற்றியும் தோல்வியும் கோர்ட்டிலும் அரசியலிலும் சகஜம்! 2026 க்கு இது ஒரு முன்னோடி! ஜெயித்தோம் என்பது கடந்த காலம் ஆகும்!


ManiK
மே 16, 2025 16:47

கவர்னர் இல்லை என்றால் தமிழகத்த எப்போதோ கூரு போட்டுருக்குமை திமுக. இவனுங்க தில்லுமுல்ல பிடிக்க குறைந்தபட்சம் 4 ரவி வேண்டும்.


Chanakyan
மே 16, 2025 16:45

Excellent photo of CM. His reaction to the news title?


சத்யநாராயணன்
மே 16, 2025 13:17

தகுதியற்றவர்கள் எல்லோரும் முதல்வர்கள் ஆகும்பொழுது நாட்டை பாதுகாப்பதற்காக அத்தகைய சட்டம் அவசியம்


ஆரூர் ரங்
மே 16, 2025 11:30

குடும்ப சுமங்கலி கேபிள் டிவி நிறுவனத்தைக் காப்பாற்ற கவர்னர் காலில் விழுந்து அரசு கேபிள் சட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர் அப்பாவின் அப்பா. முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற சட்டத்தை ஜெயா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிய போதும் மீண்டும் கவர்னரை வைத்து முட்டுக்கட்டை போட்டது உங்கப்பா. இப்போ கொள்கை அந்தர் பல்டி. பக்கா பச்சோந்தி.


Raghu
மே 16, 2025 09:06

This is the power of Indian Parliament.


theruvasagan
மே 16, 2025 08:48

தங்களோட நியாயமில்லாத லாஜிக் இல்லாத நடக்கவே வாய்ப்பில்லாத வெற்று கோரிக்கைகளுக்கு அக்கம் பக்கத்தில் இருக்கறவங்களை கூப்பிட்டு ஆதரிக்கச் சொல்லுவது அரதப் பழசான யுக்தி. புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மேல படுத்துக்குங்க என்று கூப்பாடு கேட்டு கேட்டு காது புளிச்சுப் போச்சு.


Kulandai kannan
மே 16, 2025 08:48

தேச விரோத செயல்களுக்கு முட்டுக்கட்டை அவசியம்.


theruvasagan
மே 16, 2025 08:40

தேசம் முழுவதுக்கும் நீட்தேர்வு கட்டாயம் என்று எப்போதோ உச்சநீதி மன்றம் உறுதி செய்த பிறகும் கூட அந்த தீர்ப்பை உதாசீனப் படுத்தும் விதமாக நீட் ரத்து மசோதா இயற்றுவதும் அதை அமல்படுத்த வலியுறுத்துவது சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் விடப்படும் சவால். அத்தகைய அரசியலமைப்பு மீறல்களை செய்யும் உரிமையை யார் தந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை