உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடன் சுமையால் வியாபாரி தற்கொலை

கடன் சுமையால் வியாபாரி தற்கொலை

காரைக்கால் : காரைக்கால் கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர்., சாலையை சேர்ந்த பூபதி,46; இவர் ஜல்லி,மணல் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். பூபதிக்கு கடந்த சிலநாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட கடன் சுமை அதிகமானது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்துவந்தார்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூபதி வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்ட துாங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு பூபதி காணவில்லை. பின்னர் மனைவி தேடியபோது கணவன் வீட்டின் பின்பக்கம் உள்ள வேப்ப மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை