உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

ஆபாசமாக பேசிய 2 பேர் கைது

அரியாங்குப்பம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய இருவரை போலீசார் கைது செய்தனர். நோணாங்குப்பம், படகு குழாம் அருகில் ஒருவர் மது போதையில் அவ்வழியாக செல்பவர்களை ஆபாசமாக பேசுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், நோணாங்குப்பத்தை சேர்ந்த ரகு, 30, என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அதேபோல், வீராம்பட்டினம் சாலையில் நின்று கொண்டு பொது மக்களை ஆபாசமாக பேசிய அரியாங்குப்பத்தை சேர்ந்த அரவிந்தன்,57, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை