உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது

பெட்டிக்கடையில் திருட்டு 4 வாலிபர்கள் கைது

கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே பெட்டிக்கடையில் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி இருசாயி, 40; சித்தலுார் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே தங்கி, பெட்டிக் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.நேற்று அதிகாலை 4:00 மணியளவில் சத்தம்கேட்டு எழுந்து பார்த்தபோது கடையில் கல்லா பெட்டியில் இருந்த 600 ரூபாயை 4 பேர் திருடிக் கொண்டிருந்தனர்.உடன் கூச்சலிட்டதும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 4 பேரையும் பிடித்து வரஞ்சரம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் தியாகதுருகத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன்கள் ராமகிருஷ்ணன், 18; பாலகிருஷ்ணன், 23; செல்வம் மகன் பாலாஜி, 20; ஏழுமலை மகன் சீனுவாசன், 24; என தெரியந்தது. நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ