| ADDED : மே 17, 2024 05:33 AM
தெரு நாய் தொல்லை
ராஜ்பவன் தொகுதி சுய்ப்ரேன் வீதியில் தெருநாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது. பொதுமக்களை துரத்தி கடிக்கின்றது.ராமலிங்கம், புதுச்சேரி. குடிநீர் பற்றாக்குறை
தவளக்குப்பம் அண்ணா நகரில் குடிநீர் குறைந்த அழுத்தத்தில் வருவதால் குடிநீர் பற்றாக்குறை தலை துாக்கியுள்ளது.சிவா, தவளக்குப்பம். கூடப்பாக்கம் அன்னை சுப்புலட்சுமி நகரில் அரசு பள்ளி எதிரில் கால்வாய் துார்ந்து கழிவு நீர் ஓடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அய்யனார், வில்லியனுார். வாய்க்கால் ஆக்கிரமிப்பு
வில்லியனுார், சிவகணபதி நகரில் வாய்க்கால் ஆக்கிரமிப்பினை அகற்றி, வாய்க்கால் கட்டும் பணி விரைந்து முடிக்க வேண்டும்.செல்வராசு, வில்லியனுார். குறைந்த மின் அழுத்தம்
தட்டாஞ்சாவடி சுப்பையா நகரில் இரவில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.புவனேஸ்வரி, சுப்பையா நகர்.