மேலும் செய்திகள்
மூதாட்டியின் கண்கள் தானம்
17-Feb-2025
திருக்கனுார் : மணலிப்பட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மல்லிகா, 68. இவர், நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து, அவரது மகன் முத்து மற்றும் குடும்பத்தினர், மல்லிகாவின் கண்களை தானமாக வழங்க முடிவு செய்தனர்.திருக்கனுார் கோவில் நகரம் லயன் சங்க தலைவர் சங்கீதா, மாவட்ட தலைவர்கள் செந்தில்வேலன், பிரகாஷ் ஆகியோர் உதவியுடன், அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர், மல்லிகாவின் வீட்டிற்கு வந்து, கண்விழிகளை தானமாக பெற்றனர்.அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கோவில் நகரம் லயன் சங்கத்தினர், மல்லிகாவின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.
17-Feb-2025