நோயால் அவதிப்பட்ட முதியவர் தற்கொலை
காரைக்கால்: காரைக்கால், நிரவி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன், 70; கூலி தொழிலாளி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது மனைவி, மகன்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர்.மனவேதனையில் சுப்ரமணியன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.