அரசு பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: பி.எஸ்.பாளையம், பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்ச்சியில் நலவழி மையத்தின் பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணினய தலைமை தாங்கி, டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பதற்கான துாய்மை மற்றும் ஓ.ஆர்.எஸ் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, மருத்துவ அதிகாரி மாணவர்களுடன் கலந்து உரையாடினார். நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் சசிகலா, பட்டதாரி ஆசிரியர் இந்துமதி, சமுதாய நலவழி மைய செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சுதந்திரம், நுண்கலை ஆசிரியர் ரகுநாத், பள்ளி சுகாதார மேம்பாட்டு திட்டம் மற்றும் சமுதாய நலப்பணி திட்டம் மாணவர்கள் செய்திருந்தனர்.