உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை 

இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை 

புதுச்சேரி: அரசூர் சாராயக்கடை அருகே இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வில்லியனுார் அடுத்த அரசூர் சாராயக்கடை அருகில் 48 வயது மதிக்க தக்க ஆண்நபர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !