மேலும் செய்திகள்
சனி பிரதோஷ வழிபாடு
19-Aug-2024
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பழமை வாயந்த மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று மாலை பிரதோஷ வழி பாடு நடந்தது. இதையொட்டி, காலை 9.00 மணிக்கு, பாலவிநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.தொடர்ந்து நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபி ஷேகம் செய்து, மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19-Aug-2024