ஸ்கூட்டர் திருட்டு
புதுச்சேரி: பான்லே பூத் டெக்னீசியன் ஸ்கூட்டி திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயலு 44, இவர் புதுச்சேரி பான்லே நிறுவனத்தில் டெக்னீசியனாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அரும்பார்த்தபுரத்தில் உள்ள பான்லே பூத்தில் சுப்புராயலு எலக்ட்ரிக்கல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது தனது ஸ்கூட்டியை வெளியே நிறுத்தி வைத்திருந்தார். நேற்று மாலை இவர் பணி முடித்து வெளியே வந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டி காணமால் அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.