உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாகை வார்த்தல் நிகழ்ச்சி

சாகை வார்த்தல் நிகழ்ச்சி

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் முத்துமாரியம்மன் கோவிலில் சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பூங்கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, பகல் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, தீபாரதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் நெட்டப்பாக்கம் மட்டும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை நெட்டப்பாக்கம் கிராம மக்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை