சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா
வானூர் : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டலுள்ள சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் முன்னிட்டு,கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. பின், வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ச்சியாக பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புவனேஸ்வரி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.