மாணவர்கள் நாள் விழா
புதுச்சேரி: மாணவர்கள் நாள் விழாவில் முதல் பரிசு வென்ற மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர். புதுச்சேரி, காமராஜர் மணிமண்டபத்தில் மாணவர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் அக் ஷயன், வண்ணம் தீட்டுதல் போட்டியில், வட்ட அளவில் முதல் பரிசு வென்றார். பரிசு பெற்ற மாணவரை பொறுப்பாசிரியர் ராஜ்குமார், ஆசிரியர்கள் ராஜேஷ், கன்னியம்மா, தமிழ்மல் ஆகியோர் பாராட்டினர்.