திருத்தேர் உற்சவம்
புதுச்சேரி: புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள தேவி ஏழை முத்துமாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா நடந்தது. புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள தேவி ஏழை முத்துமாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. அன்று முதல் வரும் 4ம் தேதி வரை தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 9:00 மணியளவில் திருத்தேர் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.