உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

சிதம்பரம், : கஞ்சா விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, பு.முட்லுாரில் சந்தேகிக்கும் வகையி்ல நின்றிருந்த இரு வாலிபர்களை பிடித்து சோதனை செய்தில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், பு. முட்லுார் காந்தி நகர் ரத்தினவேல் மகன் முத்துவேல், 20; பரங்கிப்பேட்டை சேகர் மகன் விஜய், 22, என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை