உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசிய இருவர் கைது

ஆபாசமாக பேசிய இருவர் கைது

புதுச்சேரி: முதலியார்பேட்டை நைனார் மண்டபம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 57; முத்தியால்பேட் வி.ஒ.சி., நகரைச் சேர்ந்தவர் ஜெயபால், 57. இருவரும், நேற்று இரவு 7:00 மணியளவில், மது குடித்துவிட்டு ஆம்பூர் சாலையில், நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ