மேலும் செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்
01-Feb-2025
புதுச்சேரி வேதபாரதி சார்பில் வரும் மார்ச் 9ம் தேதி, சமஷ்டி உபநயனம் நடக்கிறது.நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை காக்கும் பணியை புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேதபாரதி அமைப்பு செய்து வருகிறது. அடுத்த தலைமுறையினர் நெறி சார்ந்த பாதையில் செல்ல, பாரம்பரிய கலாசாரம் அறிந்து கொள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து மார்கழி பஜனை, உலக நன்மை வேண்டி ராதா மாதவ திருக்கல்யாணம் நடத்தி வருகிறது.அதன்படி, குரோதி சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி வரும் மார்ச்., 9ம் தேதி, வழுதாவூர் சாலை, தருமாபுரியில் உள்ள சங்கமம் திருமண மண்டபத்தில் நடக்கிறது.ஏழு வயது நிரம்பிய அந்தண சிறுவர்கள் முன்பதிவு செய்து பயன்பெற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94434 95950, 98426 07476 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
01-Feb-2025