உள்ளூர் செய்திகள்

தொழிலாளி சாவு

திருக்கனுார்: திருக்கனுார், தேவநாதன் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கவுதமன், 49; கூலி தொழிலாளி. இவரது மனைவி புனிதவதி. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய கவுதமன் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு, வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றித் திரிந்தார். கடந்த 18ம் தேதி திருக்கனுார் டி.வி.மலை ரோட்டில் அதிக குடிபோதையில் வலிப்பு வந்து கவுதமன் இறந்து கிடப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதமன் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து அவரது மனைவி புனிதவதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி