உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 5வது நாளாக போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 5வது நாளாக போராட்டம்

புதுச்சேரி: 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் 5 வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சங்கத்தினர் கடந்த 12ம் தேதி முதல் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5வது நாள் போராட்டத்திற்கு சங்க கவுரவ தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், புருஷோத்தமன், பிரபாகரன், லுார்து மரியநாதன், முனிசாமி, அய்யனார், பெரியசாமி, பாபு, அதியமான் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், ஈடுபட்ட டிரைவர்கள் முதல்வர் அறிவித்தபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறையில் காலி டிரைவர் பணியிடங்களை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொண்டு நிரப்ப வேண்டும்.ரூ.10 ஆயிரம் சம்ளம், போனஸ் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை