மேலும் செய்திகள்
சாரதாம்பாள் கோவிலில் மகா ருத்ர ஹோமம்
08-Oct-2024
புதுச்சேரி : மகா சண்டி ஹோம நிகழ்ச்சியையொட்டி, நேற்று நடந்த 108 சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மகா சண்டி ஹோமம், 108 சுவாசினி பூஜை நிகழ்ச்சியையொட்டி, ஸ்ரீ வித்யா மகா மண்டபத்தில், குரு பூஜை, கோ பூஜை, வருஷபபூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சப்தசதி பாராணயம், மகா லட்சுமி ஹோமம், யோகினி பைரவ பூஜை ஆகியவை நேற்று முன்தினம் நடந்தது.நேற்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் மகா சண்டி ஹோமம், 108 சுவாசினி பூஜை,மகா பூர்ணாஹூதி, வசோர் தாரை, கலச புறப்பாடு ஆகியவை நடந்தது.சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஹோமம் மற்றும் பூஜைகள் கீதா ராம் குருக்கள் தலைமையில் நடந்தது.
08-Oct-2024