உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் புனிதராஜா மற்றும் போலீசார் பழனிசாமி, ரமேஷ் ஆகியோர் மண்ணாடிப்பட்டு ஏரிக்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு சந்தே கம்படும்படி நின்றிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டிப் பிடித்து, சோதனை செய்ததில் 75 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். விசாரணையில் தமிழகப் பகுதியான பகண்டை அம்பேத்கர் வீதி ராஜேஷ், 24; மாரியம்மன் கோவில் தெரு தமிழ்செல்வன், 19; என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை