உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

கடலுார்: கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் மணி மகன் ஸ்ரீஹரன்,13. தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதி சுரேஷ் மகன் சரவணபாலாஜி,11: ஆறாம் வகுப்பு மாணவர்.சிறுவர்கள் இருவரும், அப்பகுதியை சேர்ந்த சில நண்பர்களுடன் நேற்று காலை நத்தவெளி பகுதியிலுள்ள குளத்தில் குளித்தனர். அப்போது, ஸ்ரீஹரனும், சரவணபாலாஜியும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த உடனிருந்த சிறுவர்கள், கூச்சலிட்டபடியே அருகிலிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர். அவர்கள் சென்று குளத்தில் மூழ்கிய சிறுவர்களை மீட்டபோது, இருவரும் உயிரிழந்தது தெரிய வந்தது.தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் இரு சிறுவர்களின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்த சிறுவர்களின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை