உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3 பேரிடம் ரூ. 7.59 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு வலை

3 பேரிடம் ரூ. 7.59 லட்சம் அபேஸ் மோசடி கும்பலுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில், 3 பேரிடம் 7.59 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். வில்லியனுாரை சேர்ந்தவர் விசுவநாதன். இவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டிக்கு 5 லட்சம் பணம் தருவதாக கூறினார். அதைநம்பி, செயலாக்க கட்டணமாக 49 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். அனிதா நகரை சேர்ந்தவர் கண்ணியம்மாள் அலெக்ஸ் வேணி. இவர் கடன் வாங்குவது தொடர்பாக, மோசடி கும்பலிடம் 1.36 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். ரெட்டியார்பாளையம் பவழ நகரை சேர்ந்தவர் ஜெயகுமாரி. இவர் பகுதி நேர வேலை தேடினார். டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபரிடம், ஆன்லைன் வழியாக படிப்படியாக 5.74 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்து, 3 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Pudhuvai Paiyan
டிச 24, 2024 10:07

தினமும் இத்தகைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, குற்றவாளிகளை பிடிக்க சைபர் க்ரைம் பொலிஸாருக்கு உயர்தர தொழில் நுட்பமும் மற்றும் தேவையான வசதிகளும் அளிக்க அரசும், தன்னார்வலர்களும் முன்வரவேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை