திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி: திருமணம் நடக்காத ஏக்கத்தில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதகடிப்பட்டுபாளையம் பகு தியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 31; தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கு நரம்பு பிரச்னை உள்ளது. இதற்காக ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரு கிறார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்த வாசுதேவன், அவரது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.