வேளாண் அதிகாரிக்கு பாராட்டு
புதுச்சேரி: புதுச்சேரி இணை வேளாண் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற தனசேகரனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி வேளாண்துறையில் 36 ஆண்டுகளாக வேளாண் அலுவலர், தலைமை விதை சான்றளிப்பு அதிகாரி, துணை மற்றும் இணை வேளாண் இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.பணி ஓய்வு பெற்ற தனசேகரனுக்கு, வேளாண்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.