உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அய்யனார் கோவில் கும்பாபி ேஷகம்

 அய்யனார் கோவில் கும்பாபி ேஷகம்

புதுச்சேரி: செல்லஞ்சேரி மதுரா கம்பிளிகாரன்குப்பம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், எல்லையம்மன், பூரணி புஷ்கலாம்பிகை உடனுறை வில்வமணி அய்யனார் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபி ேஷகம் விழா நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை 9 மணிக்கு அனுக்ஞை, எஜமான் சங்கல்பம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜையும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி,பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, மந்திர ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு மங்கள வாத்தியம், இரண்டாம் கால யாக பூஜை, கோபூஜை, 8.45 மணிக்கு கடம் புறப்பாடு தொடர்ந்து, 9.30 மணிக்கு வில்வமணி அய்யனார் கோவில் கும்பாபி ேஷகமும், 10.00 மணிக்கு எல்லையம்மன், கற்பக விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !