உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் - பின்னாட்சிக்குப்பம் புறவழிச்சாலை: சப் கலெக்டர் ஆய்வு

பாகூர் - பின்னாட்சிக்குப்பம் புறவழிச்சாலை: சப் கலெக்டர் ஆய்வு

பாகூர்: பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலை, புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சப் கலெக்டர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே புறவழிச்சாலை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த சாலையால், கிராமங்களை இணைக்கும் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டு வருகிறது. குறிப்பாக, பாகூரில் இருந்து பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு வழியாக பிள்ளையார்குப்பம் செல்லும் சாலையை மூட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 21ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.இந்நிலையில், தெற்கு மாவட்ட சப் கலெக்டர் சோம சேகர் அப்பராவ் கொட்டாரு நேற்று காலை பாகூர் - பின்னாட்சிக்குப்பம் சாலை புறவழிச்சாலை சந்திப்பில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள், ''ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாகூர் - பிள்ளையார்குப்பம் சாலையை மூட கூடாது, டவுண்டான, அல்லது மேம்பாலம் அமைத்து பயன்பாட்டிற்கு கெண்டு வர வேண்டும் என்றனர்.'' இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் தெரிவித்து சென்றார். ஆய்வின் போது, தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை