உள்ளூர் செய்திகள்

பைக் திருட்டு

புதுச்சேரி: வீட்டு எதிரில் நிறுத்திய பைக் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உறுவையாறு செல்வா நகர் 7 வது தெருவைச் சேர்ந்தவர் விக்ரமபூபதி 43, தனியார் கம்பெனி ஊழியர். இவர் கடந்த மாதம் 25ம் தேதி இரவு 8.30 மணியளவில் பணி முடிந்து வீட்டின் எதிரில் தனக்கு சொந்தமான பைக்கை பூட்டிவிட்டு படுக்க சென்றார். மறுநாள் 26ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை