மேலும் செய்திகள்
கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்
23-May-2025
புதுச்சேரி : அண்ணா சாலை, பெரிய பாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்காக, ரூ. 1 லட்சம் 5 ஆயிரம் நிதியுதவியை மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் வழங்கினார்.உருளையன்பேட்டை தொகுதி, அண்ணா சாலை அமைந்துள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை யொட்டி, கோவில் திருப்பணிக்காக மோடி மக்கள் சேவை மைய நிறுவனரும், பா.ஜ., தொகுதி பொறுப்பாளருமான பிரபுதாஸ், முனைவர் பிரீதா பிரபுதாஸ் ஆகியோர் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியை கோவில் அறங்காவலர் குழுவிடம் வழங்கினார்.இதில், பா.ஜ., நிர்வாகிகள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.
23-May-2025