உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெருமாள் கோவிலுக்கு பிரிட்ஜ் வழங்கல்

 பெருமாள் கோவிலுக்கு பிரிட்ஜ் வழங்கல்

புதுச்சேரி: முத்தரையார்பாளையம் கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு இந்திரா நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜகுமார் பிரிட்ஜ் நன்கொடையாக வழங்கினார். இந்திரா நகர் தொகுதி, முத்தரையர்பாளையம் கோவிந்த பேட்டையில் அமைந்துள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவில், வைகுண்ட ஏகாதேசி பூஜையில் இந்திரா நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் ராஜாகுமார் கலந்து கொண்டு கோவிலுக்கு நன்கொடையாக பிரிட்ஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார காங்., தலைவர் சோமசுந்தரம், மூத்த நிர்வாகிகள் கோபால், ரங்கநாதன், சுரேஷ்குமார், ராமமூர்த்தி, மக்கள் நீதி மைய செயலாளர் ராமன், கம்யூ., தலைவர் விஸ்வநாதன், சங்கர், சதீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ