உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு

பொது இடத்தில் ரகளை 3 பேர் மீது வழக்கு

பாகூர் : பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துளசிங்கம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, சோரியாங்குப்பம் மேம்பாலம் அருகே நின்றிருந்த சிலர், மது போதையில், பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார், 41; அருள், 39; காரணப்பட்டு பிரகாஷ், 27; என்பதும்தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி