அவதுாறு போஸ்டர் ஒட்டியவர் மீது வழக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில், அனுமதி இல்லாமல் சாலை உள்ளிட்ட போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில், பேனர் வைப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர். கண்டாக்டர் தோட்டம் பகுதியில், அரசுக்கு எதிராக அவதுாறு பரப்பும் வகையில், போஸ்டர் ஒட்டிய புதுச்சேரியை சேர்ந்த கோபால், 51, என்பவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.