உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

சேற்றில் சிக்கிய மாடு மீட்பு

புதுச்சேரி: சேற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.முருங்கப்பாக்கம் என்.ஆர்.நகர், பத்திரிகையாளர் குடியிருப்பு பகுதிக்கு நேற்று காலை மாடுகள் சில மேய்ச்சலுக்கு சென்றன. அப்போது, அங்குள்ள காலிமனை வழியாக மாடுகள் சென்றபோது, மழையின் காரணமாக சேற்றில் மாலை 3:00 மணி அளவில் மாடு ஒன்று சிக்கிக் கொண்டு, வெளியே வர முடியாமல் தவித்தது.தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து, சென்று மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாட்டின் 4 கால்களும் சேற்றில் முற்றிலுமாக மறைந்ததால், மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுத்து, மாட்டை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை