மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு
13-Sep-2025
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, சோரியாங்குப்பம் மேட்டு சந்திப்பில், ஒருவர் குடி போதையில், பொதுமக்களை ஆபாசமாக திட்டி, ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர், கடலுார் செம்மண்டலத்தை சேர்ந்த ராஜேஷ், 25, என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட கடலுார் கே.என்.பேட்டை பரணி, 25; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
13-Sep-2025