மேலும் செய்திகள்
பணி நீக்க ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
26-Jun-2025
புதுச்சேரி: பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள், மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி, பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், தேர்தல்துறை மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று சுதேசி மில் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன், ரவிச்சந்திரன், குமரகுரு, லெனின்பாஸ்கர், சத்யாவதி, காரைக்கால் மணிவண்ணன், கலியமூர்த்தி, சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள், உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
26-Jun-2025